திங்கள், 14 ஜனவரி, 2013

Spirit - Malayalam Movie Review


மோகன்லால் என்றாலே இயல்பான நடிப்பில் அசரடிப்பவர் மற்றும் லைம்லைட் காமெடியில் கலக்குபவர் என்று பிராண்ட் உண்டு. கடந்த சில வருடங்களாக தடம்புரண்டு ஹீரோயிசத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து மோகன்லால் நடித்த அத்தனை படங்களுமே சூப்பர் டூப்பர் ஃப்ளாப் :):):) தமிழ் படத்தை பார்த்து கெட்டாரோ அல்லது மம்முட்டியை கண்டு வாயப்புளந்து அவர் ஸ்டைலில் செய்ய நினைத்தாரோ என்னவோ !!!

தீடீருன்னு நடுமண்டைல பல்பு எறிஞ்சவரா தனக்கு என்ன வருமோ அதை செய்வோம் என்று தன் பாணிக்கு ஒரு அட்டகாசமான டீமுடன் ‘Spirit’ என்ற இந்த படத்தின் மூலம் திரும்பினார் மனுஷன். சும்மா சொல்லக்கூடாது, மனுசன் தன்னுடைய நடிப்பில் பின்னிப் பெடல் எடுத்துட்டார் JJJ
Spirit Movie
 சமீபத்தில் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டான பிராஞ்சி ஏட்டன் அண்ட் தி செயிண்ட் & இந்தியன் ரூபி ஆகிய படத்தின் மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்த இயக்குனர் ரஞ்ஜித்தின் மற்றொரு படைப்பு. கதைக்கு ஏற்ற மிக அருமையான பட தலைப்பு. Spirit என்றால் மது (எரிசாராயம்) என்றும் பொருள் கொள்ளலாம்; அல்லது (மன)தைரியத்தை காட்டு என்றும் பொருள் கொள்ளலாம். இவ்விரண்டையும் ஒருங்கிணைக்கும் விஷயங்களே கதை. இனி கதைக்கு செல்வோம்.

ரகுநந்தன் ஒரு முன்னால் அயல்நாட்டு வங்கி ஊழியன், பல்வேறு வெளிநாட்டில் பணிபுரிந்தவன், தன் மனதிற்கு பிடிக்காத ஒன்றை எப்பொழுதும் செய்யாதவன், தன்பணி Bore அடிப்பதால் பணம் கொழிக்கும் தன் வேலையை உதறிவிட்டு தற்போது டிவி நிகழ்ச்சி ஒன்றின் தொகுப்பாளரா இருக்கார். ‘Show the Spirit’  என்ற டிவி நேர்காணல் நிகழ்ச்சி நம் நீயா நானா  போன்று மக்களிடத்தில் ஏக வரவேற்பு பெற்ற ஒன்று.  இந்நிகழ்ச்சியில் வருபவரை தன் கேள்விக்கணைகளால் பெண்டெடுக்கும் ரகுநந்தனாக மோகன்லால். அரசியல்வாதி, பிசினஸ்மேன், உயரதிகாரிகள், IPS போலீஸ் ஆபிஸர் என யாராக இருந்தாலும் தன் கேள்விகளால், பேச்சால் அவர்களின் இருண்ட பகுதியை வண்டவாளமாக்கி, மக்களின் பேராதரவைப் பெற்றவர். அடிப்படையில் நல்லவர்.
இப்பேர்பட்ட ரகுநந்தனுக்கு, மக்களுக்கு தெரியாத மற்றொரு பக்கம் உண்டு. அதான் குடிக்கு அடியாகி கிடப்பது. குடியில்லாமல் தன்னால் இருக்க முடியாது என்ற நிலைமை. இவ்வளவு ஏன், டிவி நிகழ்ச்சியின் இடையில் விடும் பிரேக்கிற்கு நடுவில் காபி கப்பில் ஒரு பெக் வோட்கா அடிக்கும் பழக்கம் கொண்டவன். சரக்கு அடித்தபடியே நிகழ்ச்சியை தொடர்பவன். காலை எழும்போது வாய் கொப்பளிக்க கூட சரக்கை நாடுபவன், அத்தனை விலையுயர்ந்த சரக்கையும் சேர்ப்பதில் பருகுவதில் ஆர்வம் கொண்டவன், தனக்கென பிரத்தேக பார் அமைப்பு வீட்டில் உண்டு, அது தவிர ரெகுலராக செல்லும் பார், அங்கு தனக்கான பிரத்தேக இருக்கை, ஆங்கிலத்தில் தன் முதல் நாவல் எழுதிக்கொண்டிருப்பவன்.


தன் மனதிற்கு பிடித்ததை யார் சொன்னாலும் அதை நிறுத்தாதவன். குடியின் காரணமாக, தன் இல்வாழ்க்கையில் விவாகரத்து பெற்றவன். விவாகரத்து ஆனாலும் தன் மனைவி மற்றும் தற்போதைய கணவருடன் நல்ல புரிதலில், நட்பில் இருப்பவன். தனக்கும் தன் மனைவிக்கும் பிறந்த மாற்று திறனாளியான (Deaf-dump) மகனை, மறுமண தம்பதிகள் அவர்களின் பராமரிப்பில் வளர்ப்பவர்கள் என இதை திரையில் பார்க்கவே ஒரு கவிதை போல உள்ளது. தமிழில் ஏன் எப்படி ஒரு நல்ல காட்சிகளை வைக்க முற்படமாட்டிறார்கள்??? நான் குறிப்பிடுவது ரகுநந்தன் மனைவியின் மறுமணம், அதற்கு பின்பு இருவருக்குள் இருக்கும் நட்பு ரீதியிலான புரிதல். எனக்கு பிடித்த செம சுவாரஸ்யமான பகுதியும் கூட. காணும்போது அட என ஆச்சர்யப்பட்டேன். மோகன்லாலுக்கு செம ஸ்கோப்.
சமீராக வரும் நபர்
ரகுநந்தனின் நண்பனான சமீர், ஒரு கவிஞனும் கூட. குடியின் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அங்கு குடி இல்லாமல் இருக்க முடியாமல் ரகு வீட்டிற்கு தப்பி வருகிறான். பல நாள் பட்டினி கிடந்தவன் போல் பரபரப்பாக பாட்டிலை திறந்து குடித்து, அந்த நொடியே சாகிறான், ரகுநந்தனின் மடியில். இந்த சம்பவம் ரகுவை வெகுவாக பாதிக்கிறது, இதன் காரணமாக முதல் முறையாக குடியில் இருந்து மீழ்வதைப் பற்றி யோசிக்கிறான். மற்றொரு புறம் தன் வீட்டு வேலைக்காரியான கல்பனாவின் கணவர் மணி, மொடாக்குடிகாரன். குடியால் நிதானம் இழந்தால் தன் மனைவியை போட்டு அடித்து நொறுக்குபவன்.  மற்றொரு சம்பவத்தில் மணி, தன் மகனையே மண்டை உடையும் அளவிற்கு அடிப்பவன். இச்சம்பவங்கள் ரகுநந்தனை ஆழமாக சிந்திக்க வைக்கிறது.
குடிகார மணியாக நந்து
குடியால் எல்லோர் வாழ்க்கையும் எப்படி சீரழிக்கிறது; குடி ஒரு சாதாரண பிரச்சனையில்லை; சமூக பிரச்சனையாக உருவெடுத்துள்ளதாக உணர்கிறான். இப்போது மிகத்தெளிவாக தன் ஷோ த ஸ்ப்ரிட் நிகழ்ச்சியின் மூலம் ஒரு புதிய ப்ராஜெக்ட்டைத் தொடங்குகிறான். அது என்ன ப்ராஜெக்ட்? ரகுவின் வாழ்க்கை எப்படி திசை மாறுகிறது என்பது தான் மீதி கதையே. முடிவு என்ன என்பதை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

மோகன்லால் மீது நமக்கு காதலே வந்துவிடும் போல, அவரின் நடிப்பை பார்த்தால்.... Chanceless Acting. இவரை தவிர யார் நடித்து இருந்தாலும் படம் ப்ளாப் தான் என நினைக்கிறேன். இவருக்கு மாற்றே யோசிக்க முடியாத நடிப்பு. மிதமாக குடித்து நடிக்கும் பாங்கு, பார்த்தால் தான் புரியும். நம் தமிழ் படத்தில் காட்டுவதை போல் ஓவர் அலம்பல் இல்லாமல், ரெண்டு பெக் அடித்தவன் எப்படி நடப்பான், கண்கள் எப்படி இருக்கும், என்ன பேசுவான் என கணகச்சிதம். Love u laalaetan. 

படத்தின் வெற்றியில் பெரும்பங்கு ’Right casting’. அவரவர் கதாபாத்திரத்திற்கு ஏற்ற மிகத்சரியான ஆட்கள். வீட்டுவேலைக்காரியாக கல்பனா, குடிகார மணியாக நடித்த நந்து, IPS ஆபிஸர் சுப்பிரியா, மனைவியாக கனிகா, மறுமண கணவர் சங்கர் ராமகிருஷ்ணன், அச்சிறுவன், சமீராக வரும் நண்பர் என அசத்தல். எல்லோரும் செம பர்பார்மென்ஸ். இதே போல, எந்த இடத்திலும் பிரச்சார நெடியில்லாமல் பார்த்துக்கொண்டதில் இயக்குனர் வெற்றி பெற்றார்.

குடிப்பழக்கத்திற்கு எதிரான படம் என்பதால் ஏதோ கருத்து சொல்லும் படமாகவோ டாக்குமெண்ட்ரியைப்போல இருக்கும் என்றோ நினைக்கவே வேண்டாம். இயக்குனர் என்ன சொல்ல நினைத்தாரோ அதை சுவாரஸ்யமாகவே சொல்லியிருக்கிறார்.

எனக்கு ஒரே ஒரு வருத்தம். நம்ம திலகரை வீணடித்துவிட்டார்கள் என்பதே. மிகச்சிறிய கதாபாத்திரம், அதிலும் தன் முத்திரையை அவர் பதிக்க தவறவில்லை. எனக்கு பர்ஷனலாக முதல் பாதி தந்த பிரம்மிப்பு இரண்டாம் பாதி தரவில்லை JJJ ஆனால் படம் கண்டிப்பாக பார்க்கலாம்.

இப்படம் கேரளாவில் 100 நாட்களுக்கு மேல் ஓடோஓடென்று ஓடியது. இப்படம் தந்த தெம்பில் மோகன்லால் நடித்த மற்றொரு வெற்றிப்படம் Run Baby Run. அதை அடித்த பகுதியில் பார்ப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக