திங்கள், 14 ஜனவரி, 2013

Spirit - Malayalam Movie Review


மோகன்லால் என்றாலே இயல்பான நடிப்பில் அசரடிப்பவர் மற்றும் லைம்லைட் காமெடியில் கலக்குபவர் என்று பிராண்ட் உண்டு. கடந்த சில வருடங்களாக தடம்புரண்டு ஹீரோயிசத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து மோகன்லால் நடித்த அத்தனை படங்களுமே சூப்பர் டூப்பர் ஃப்ளாப் :):):) தமிழ் படத்தை பார்த்து கெட்டாரோ அல்லது மம்முட்டியை கண்டு வாயப்புளந்து அவர் ஸ்டைலில் செய்ய நினைத்தாரோ என்னவோ !!!

தீடீருன்னு நடுமண்டைல பல்பு எறிஞ்சவரா தனக்கு என்ன வருமோ அதை செய்வோம் என்று தன் பாணிக்கு ஒரு அட்டகாசமான டீமுடன் ‘Spirit’ என்ற இந்த படத்தின் மூலம் திரும்பினார் மனுஷன். சும்மா சொல்லக்கூடாது, மனுசன் தன்னுடைய நடிப்பில் பின்னிப் பெடல் எடுத்துட்டார் JJJ
Spirit Movie
 சமீபத்தில் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டான பிராஞ்சி ஏட்டன் அண்ட் தி செயிண்ட் & இந்தியன் ரூபி ஆகிய படத்தின் மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்த இயக்குனர் ரஞ்ஜித்தின் மற்றொரு படைப்பு. கதைக்கு ஏற்ற மிக அருமையான பட தலைப்பு. Spirit என்றால் மது (எரிசாராயம்) என்றும் பொருள் கொள்ளலாம்; அல்லது (மன)தைரியத்தை காட்டு என்றும் பொருள் கொள்ளலாம். இவ்விரண்டையும் ஒருங்கிணைக்கும் விஷயங்களே கதை. இனி கதைக்கு செல்வோம்.

ரகுநந்தன் ஒரு முன்னால் அயல்நாட்டு வங்கி ஊழியன், பல்வேறு வெளிநாட்டில் பணிபுரிந்தவன், தன் மனதிற்கு பிடிக்காத ஒன்றை எப்பொழுதும் செய்யாதவன், தன்பணி Bore அடிப்பதால் பணம் கொழிக்கும் தன் வேலையை உதறிவிட்டு தற்போது டிவி நிகழ்ச்சி ஒன்றின் தொகுப்பாளரா இருக்கார். ‘Show the Spirit’  என்ற டிவி நேர்காணல் நிகழ்ச்சி நம் நீயா நானா  போன்று மக்களிடத்தில் ஏக வரவேற்பு பெற்ற ஒன்று.  இந்நிகழ்ச்சியில் வருபவரை தன் கேள்விக்கணைகளால் பெண்டெடுக்கும் ரகுநந்தனாக மோகன்லால். அரசியல்வாதி, பிசினஸ்மேன், உயரதிகாரிகள், IPS போலீஸ் ஆபிஸர் என யாராக இருந்தாலும் தன் கேள்விகளால், பேச்சால் அவர்களின் இருண்ட பகுதியை வண்டவாளமாக்கி, மக்களின் பேராதரவைப் பெற்றவர். அடிப்படையில் நல்லவர்.
இப்பேர்பட்ட ரகுநந்தனுக்கு, மக்களுக்கு தெரியாத மற்றொரு பக்கம் உண்டு. அதான் குடிக்கு அடியாகி கிடப்பது. குடியில்லாமல் தன்னால் இருக்க முடியாது என்ற நிலைமை. இவ்வளவு ஏன், டிவி நிகழ்ச்சியின் இடையில் விடும் பிரேக்கிற்கு நடுவில் காபி கப்பில் ஒரு பெக் வோட்கா அடிக்கும் பழக்கம் கொண்டவன். சரக்கு அடித்தபடியே நிகழ்ச்சியை தொடர்பவன். காலை எழும்போது வாய் கொப்பளிக்க கூட சரக்கை நாடுபவன், அத்தனை விலையுயர்ந்த சரக்கையும் சேர்ப்பதில் பருகுவதில் ஆர்வம் கொண்டவன், தனக்கென பிரத்தேக பார் அமைப்பு வீட்டில் உண்டு, அது தவிர ரெகுலராக செல்லும் பார், அங்கு தனக்கான பிரத்தேக இருக்கை, ஆங்கிலத்தில் தன் முதல் நாவல் எழுதிக்கொண்டிருப்பவன்.


தன் மனதிற்கு பிடித்ததை யார் சொன்னாலும் அதை நிறுத்தாதவன். குடியின் காரணமாக, தன் இல்வாழ்க்கையில் விவாகரத்து பெற்றவன். விவாகரத்து ஆனாலும் தன் மனைவி மற்றும் தற்போதைய கணவருடன் நல்ல புரிதலில், நட்பில் இருப்பவன். தனக்கும் தன் மனைவிக்கும் பிறந்த மாற்று திறனாளியான (Deaf-dump) மகனை, மறுமண தம்பதிகள் அவர்களின் பராமரிப்பில் வளர்ப்பவர்கள் என இதை திரையில் பார்க்கவே ஒரு கவிதை போல உள்ளது. தமிழில் ஏன் எப்படி ஒரு நல்ல காட்சிகளை வைக்க முற்படமாட்டிறார்கள்??? நான் குறிப்பிடுவது ரகுநந்தன் மனைவியின் மறுமணம், அதற்கு பின்பு இருவருக்குள் இருக்கும் நட்பு ரீதியிலான புரிதல். எனக்கு பிடித்த செம சுவாரஸ்யமான பகுதியும் கூட. காணும்போது அட என ஆச்சர்யப்பட்டேன். மோகன்லாலுக்கு செம ஸ்கோப்.
சமீராக வரும் நபர்
ரகுநந்தனின் நண்பனான சமீர், ஒரு கவிஞனும் கூட. குடியின் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அங்கு குடி இல்லாமல் இருக்க முடியாமல் ரகு வீட்டிற்கு தப்பி வருகிறான். பல நாள் பட்டினி கிடந்தவன் போல் பரபரப்பாக பாட்டிலை திறந்து குடித்து, அந்த நொடியே சாகிறான், ரகுநந்தனின் மடியில். இந்த சம்பவம் ரகுவை வெகுவாக பாதிக்கிறது, இதன் காரணமாக முதல் முறையாக குடியில் இருந்து மீழ்வதைப் பற்றி யோசிக்கிறான். மற்றொரு புறம் தன் வீட்டு வேலைக்காரியான கல்பனாவின் கணவர் மணி, மொடாக்குடிகாரன். குடியால் நிதானம் இழந்தால் தன் மனைவியை போட்டு அடித்து நொறுக்குபவன்.  மற்றொரு சம்பவத்தில் மணி, தன் மகனையே மண்டை உடையும் அளவிற்கு அடிப்பவன். இச்சம்பவங்கள் ரகுநந்தனை ஆழமாக சிந்திக்க வைக்கிறது.
குடிகார மணியாக நந்து
குடியால் எல்லோர் வாழ்க்கையும் எப்படி சீரழிக்கிறது; குடி ஒரு சாதாரண பிரச்சனையில்லை; சமூக பிரச்சனையாக உருவெடுத்துள்ளதாக உணர்கிறான். இப்போது மிகத்தெளிவாக தன் ஷோ த ஸ்ப்ரிட் நிகழ்ச்சியின் மூலம் ஒரு புதிய ப்ராஜெக்ட்டைத் தொடங்குகிறான். அது என்ன ப்ராஜெக்ட்? ரகுவின் வாழ்க்கை எப்படி திசை மாறுகிறது என்பது தான் மீதி கதையே. முடிவு என்ன என்பதை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

மோகன்லால் மீது நமக்கு காதலே வந்துவிடும் போல, அவரின் நடிப்பை பார்த்தால்.... Chanceless Acting. இவரை தவிர யார் நடித்து இருந்தாலும் படம் ப்ளாப் தான் என நினைக்கிறேன். இவருக்கு மாற்றே யோசிக்க முடியாத நடிப்பு. மிதமாக குடித்து நடிக்கும் பாங்கு, பார்த்தால் தான் புரியும். நம் தமிழ் படத்தில் காட்டுவதை போல் ஓவர் அலம்பல் இல்லாமல், ரெண்டு பெக் அடித்தவன் எப்படி நடப்பான், கண்கள் எப்படி இருக்கும், என்ன பேசுவான் என கணகச்சிதம். Love u laalaetan. 

படத்தின் வெற்றியில் பெரும்பங்கு ’Right casting’. அவரவர் கதாபாத்திரத்திற்கு ஏற்ற மிகத்சரியான ஆட்கள். வீட்டுவேலைக்காரியாக கல்பனா, குடிகார மணியாக நடித்த நந்து, IPS ஆபிஸர் சுப்பிரியா, மனைவியாக கனிகா, மறுமண கணவர் சங்கர் ராமகிருஷ்ணன், அச்சிறுவன், சமீராக வரும் நண்பர் என அசத்தல். எல்லோரும் செம பர்பார்மென்ஸ். இதே போல, எந்த இடத்திலும் பிரச்சார நெடியில்லாமல் பார்த்துக்கொண்டதில் இயக்குனர் வெற்றி பெற்றார்.

குடிப்பழக்கத்திற்கு எதிரான படம் என்பதால் ஏதோ கருத்து சொல்லும் படமாகவோ டாக்குமெண்ட்ரியைப்போல இருக்கும் என்றோ நினைக்கவே வேண்டாம். இயக்குனர் என்ன சொல்ல நினைத்தாரோ அதை சுவாரஸ்யமாகவே சொல்லியிருக்கிறார்.

எனக்கு ஒரே ஒரு வருத்தம். நம்ம திலகரை வீணடித்துவிட்டார்கள் என்பதே. மிகச்சிறிய கதாபாத்திரம், அதிலும் தன் முத்திரையை அவர் பதிக்க தவறவில்லை. எனக்கு பர்ஷனலாக முதல் பாதி தந்த பிரம்மிப்பு இரண்டாம் பாதி தரவில்லை JJJ ஆனால் படம் கண்டிப்பாக பார்க்கலாம்.

இப்படம் கேரளாவில் 100 நாட்களுக்கு மேல் ஓடோஓடென்று ஓடியது. இப்படம் தந்த தெம்பில் மோகன்லால் நடித்த மற்றொரு வெற்றிப்படம் Run Baby Run. அதை அடித்த பகுதியில் பார்ப்போம்.

புதன், 9 ஜனவரி, 2013

யோகவும் நானும் - Yogev’s Assessment Exam for K.G.1


Yogev’s Assessment Exam for K.G.1

துபாயில் Indian High School என்ற பள்ளி பிரசத்தி பெற்றது. அதில் சீட் கிடைக்க எப்பவும் செம்ம தள்ளுமுல்லு தான். அவர்களின் புதிய ஸ்கூலான Indian International Schoolல என் மகனுக்கு இடம் பிடித்தேன்.

இன்று அவனுக்கு
Assessment test  நடக்கும் நாள். வீட்டில் இருந்து கிளம்பும் முன் என் அம்மாவின் முன்பு தொட்டு கும்பிட்டுகொண்டு கிளம்பச் சொன்னேன். இன்று காலை ஆபிசுக்கு லீவு போட்டுட்டு, என் மகன் யோகவ்வை மதிப்பீட்டு தேர்விற்கு பள்ளிக்கு அழைத்து சென்றோம். இதில் யோகவ் வென்றால் தான் பள்ளியில் சேர அனுமதி. ஆனால் அட்மிஷன் ஃபீஸ், பஸ் ஃபீஸ், டியூசன் ஃபீஸ், நிர்வாக ஃபீஸ், எக்‌ஷ்ரா கரிகுலர் ஃபீஸ் என பலதும் ஏற்கனவே உருவிட்டாங்க. இருந்தாலும் * கண்டிசன்ஸ் அப்ளைல, இதில் வென்றால் தான் ஸ்கூலில்
சீட்
; இல்லையென்றால் பணம் திருப்பித் தரப்படும் என போட்டிருந்தாங்க.

நான் பரிச்சைக்கு செல்லும்போது கூட இவ்வளவு டென்சன் ஆகிருப்பேன் என நினைவில் இல்லை. கை கால் எல்லாம் ஒரே நடுக்கம், வாய்ஸ் கம்முது, வகுரு எல்லாம் கலக்குது, ஒரு பதற்றத்தில் உச்சா வருவது போல உணர்வு JJJ என எல்லாம் ஒரே நேரத்தில் அட்டாக் பண்ணுகிறது. (மனதில் அபியும் நானும் பிரகாஷ்ராஜ் அலக்‌ஷாண்டர் குதிரை சீன் படமாக ஓடி டர்ர்ர்ர் கிளப்புது).

இத்தனை பதற்றத்திற்கு காரணம் என் மகனுக்கு ஆங்கிலத்தில் அவ்வளவா பேசத்தெரியாது. தவறு எங்கள் மீதுதான். வீட்டில் தெலுங்கு மற்றும் தமிழ் மொழி தான் பேசுவோம். இதில் கேள்வி கேட்ட பிச்சு உதருவான்
A,b,c,b முதல் 1,2,3...20, fruits, Vegetables, Animals அத்தனையும் அத்துபடி யோகவ்விற்கு. நான் அவ்வையார் ஆரம்ப பள்ளி சாலையில் படித்ததால், ஆங்கிலம் வாசலிலேயே நின்னுக்குது J. ஆனால் துபாயில் பொது மொழி ஆங்கிலம் தானே.

ஒரு வாரமா ரெடி மேட் இங்கிலீஷ் தான் சொல்லிக்கொருத்தோம். What is your Name, what is your father name, what is your mother name, How are you, what is this, come, go, get up, sit down….. ன்னு கேட்டா என்ன செய வேண்டும் என தெலுங்கில் சொல்லி புரிய வைத்தோம், என்ன பண்ண வேண்டும என்று ஒரே பாடம் தான்..... இதற்கு பதில் சொன்னால், மிஸ் உனக்கு நிறைய சாக்லேட் கொடுப்பாங்க, நானும் பாக்கெட் ஃபுல்லா கொடுப்பேன் என தாஜா செய்து வைத்தேன். 

ஒரு வழியா பள்ளிக்கு போனா, பையனை தனியா அழைத்து போவோம் என சொல்லிட்டாங்க, assessmentக்கு.. கிழிஞ்சது கிருஷ்னகிரி என நினைத்துக்கொண்டேன்.

யோகவ்கிட்ட மிஸ் உன்கிட்ட தனியா கூட்டிட்டு போய் அதே கேள்வி தான் கேட்பாங்க, நீ சொல்லு, நான் உனக்கு
big chocolate வாங்கி தரேன் என ஐஸ் வைத்தேன். அவன் கேட்காத மாதிரி, அவன் பாட்டுக்கு ஒரே விளையாட்டில் தீவிரமா இருந்தான்.

யோகவ் என அழைத்த்தும் டர்ர்ர் கிளம்பிடுச்சு. பையனை கூட்டிகொண்டு வாசல் வரை போனோம். மிஸ்,
How are you என கேட்டாங்க? யோகவ் ஐம் பைன் (Pine) என்றான்  அப்பாடா போதும்டா தப்பிச்சோம் என மனதில் சிறிய சந்தோஷம். யோகவ் அழுகாமல் போனதே ஆச்சர்யமாக இருந்தது.

போனவுடன், எப்படியும் ஐந்து நிமிட்த்தில் அலறியடிட்டு ஓடி வரப்போறான் என மனதில் ஒரே பதற்றம். மனசு கிடந்து அடிச்சுக்குது. வேற பள்ளியில் சேர்க்க வேண்டி வருமோ, இல்ல இல்ல எப்படியும் கிடைச்சிரும் என என் மனம் பலவாறு பேசுகிறது.

ஒரு 30 நிமிடம் கழிந்தும், யோகவ் பற்றி ஒரு அறிகுறியும் இல்லை.
35ஆம் நிமிடத்தில் மிஸ்சுடன் சிரித்துக்கொண்டே வந்தான். அதைக்கண்டவுடன் செம்ம ஆச்சர்யம். யோகவ் பெற்றோர்கள் வரவும் என்றார்கள். அருகில் சென்று மிஸ்சை வெரிச்சோ என என்ன சொல்லப்போகிறார்களோ என பார்த்தேன்.
கம்மிய குறலில், How did he? என்றேன். மிஸ், சிரிச்சுக்கிட்டே Your Son did very well and is Selected  என்று சொன்னாங்க பாருங்க... அதை விடவும் ஆச்சர்யம் தாங்கவே இல்ல.... தப்பிச்சோம்டா சாமி என்று.

செம்ம குத்து டேன்ஸ் ஆடனும் போல இருந்தது.
ஆடுகளம்படத்தில் வரும் பாடல் தான் மனதில் உடனே தோன்றியது ஹே ஒத்த சொல்லால என் உசுறெடுத்து வச்சிகிட்டாஎன்று.....

இன்று என் மகன் பள்ளியில் தேர்வான நாள். என் அம்மாவிற்கு நன்றி

வியாழன், 3 ஜனவரி, 2013

Arabikatha - Malayalam Movie Review


அரபிகதா மலையாளப் படம்
- நம் மனதில் ஆழ்ந்த பாதிப்பை ஏற்படுத்தும் படம். 


உண்மையில் இப்படக்கரு கேரளாவில் கம்யூனிசம் எப்படியெல்லாம் சிதைந்துள்ளது என்னும் உட்கருத்தை அடிப்படையாக வைத்து பகடியாக எடுத்தது. கம்யூனிஸ்டு தலைமை எளிய மக்களுக்காக பாடுபடாமல், ஊழல் நிறைந்த தலைமையின் கீழ் எந்த சித்தாந்தமும் இல்லாமல், சமூக அக்கறையில்லாததை ’Under Currentஆக எடுத்துரைக்கும் படம். தமிழ்நாட்டிற்கும் கம்யூனிசயத்திற்கும் பல கிலோ மீட்டர் தூரம், படத்தை நான் அனுபவித்த பார்வையில் தருகிறேன். 


இந்த படத்திற்கு போகும் முன் ஒரு ஃபிலாஷ்பேக். நான் துபாய் செல்கிறேன் என்றவுடன் ஒட்டகம் மேய்க்கவா? என்று நக்கலாக கேட்டவர் உண்டு. துபாய் ஒருச்சாராருக்கு சொர்க்க பூமி, மற்றவருக்கோ இது ஒரு பூலோக நரகம். இங்கு வந்த புதிதில், துபாய் அப்படிப்பட்ட ஊரில்லையே என்று வியந்தேன். பிறகு ஏன், நம்ம ஊரில் அப்படி ஒரு மாயத்தோற்றம் இருக்கு என ஆராய்ந்தேன். அதன் தொடர்ச்சியாக இங்கு வாழும் கூலி ஆட்கள் (Labour Category)ஆட்களின் சூழ்நிலையும், சம்பளமும், அவர்கள் வாழ்க்கை முறையும், இங்கு எவ்வாறு அகப்பட்டார்கள் என்பதைக் கண்டு அதிர்ந்து போனேன். இப்படம் அச்சு அசலாக அவர்கள் வாழ்க்கையைப்பற்றி பொட்டில் அடித்தாற்போல சொல்லும் படம்.


இனி படத்திற்கு செல்வோம். நடிகர் ‘ஸ்ரீநிவாஸன்என்றாலே நல்ல கதையில் மட்டுமே நடிப்பார் என்று மலையாலத்தில் ஒரு தனி இமேஜ் உண்டு.. அதற்கேட்டாற்போல் அவர் நடித்த எல்லா படமும் நல்ல ஹிட்கள் தான். இதுவும் அந்த வரிசையில் ஒரு முத்து.

தன் வாழ்க்கையே கட்சிக்கும், மக்களுக்கும் அர்பணித்து கம்யூனிஸ சித்தாந்த கோட்பாடைக்கொண்ட கூபா முகந்தன், இடதுசாரி கம்யூனிஸ கட்சியை சேர்ந்த அதிதீவிர விஸ்வாசி. தன் செம்மனூர் ஊர் (கண்ணூர் மாவட்டம்) மக்களுக்கு எதுவெனினும் முன்னின்று போராட்டம் நடத்துபவர். இவரை ஓரம்கட்டிவிட்டு ஊழல் பேர்வழியான கருணானன் என்பவர் முன்னுக்கு வர துடிக்கிறார். இதே கிராமத்தில் ஒரு தோல் தொழிற்சாலை தொடங்கலாம் என்ற எண்ணத்தில் இருக்கும் ஜெகதீயை எதிர்த்து மக்களுக்காக போராட்டம் நடத்தி தடுக்கிறார். இவ்விருவரும் சூழ்ச்சை செய்து முகுந்தனை கடனில் சிக்கவைத்து, அதை அடைக்க சூழ்நிலை நிர்பந்தம் காரணமாக வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பி வைக்கிறார்கள். அங்கு வசிக்கும் மக்களின் குறை போக்கவும், அங்கு கம்யூனிஸத்தை கோலோச்சனும் உதவும் என ஏமாற்றி அனுப்பி வைக்கிறார்கள். இது ஏதோ கட்சிப்படம் என ஒதுக்கிவிடாதீர்கள். இது படத்தின் சிறுபகுதி தான்


ஸ்ரீநிவஸன் துபாய் வந்தவுடன், இங்கு அவரை வேலை வாங்கும் விதமும், அங்கு குறை கேட்டு தன் அப்பாவிதனத்தை காண்பிக்கும் விதம் செம்ம... அவ்வளவு ரகலையாக இருக்கும். தன்னை இப்படி பிழியும் முதலாளியை கண்டு தங்களின் கோரிக்கை பற்றி பேசலாம் என நினைத்தவருக்கு, அது அதிர்ச்சி. கம்யூனிஸ்ட்டான ஜெகதீதான் முதலாளி என அறியும் போது பேரதிர்ச்சி. ஜெகதீ தன் நாட்டு மக்களின் உழைப்பை சுரண்டி, அவர் மட்டும் சொகுசாக வாழ்கிறார். சில நாட்களில் தான் ஏமாற்றப்பட்டோம், சூழ்ச்சியில் வீழ்ந்தோம் என உணர்ந்து வேலையை துறக்கிறார். ஆனால் கம்யூனிஸத்தை விடவில்லை.


நல்ல வேலையில்லாதலால் தான் அனுபவிக்கும் கொடுமை, வறுமை, கடன் சுமையால் ஊருக்கு செல்ல முடியாத இயலாமை, அதன் காரணமாக கிடைக்கும் வேலையை செய்து பிழைக்கும் நிலை என இங்கிருக்கும் உண்மை நிலையை அப்படியே அப்பட்டமாக கதையாக விரிகிறது. இது வெறும் அழுகாச்சு படமும் அல்ல. ஸ்ரீநிவாசனுக்கே உரிய நிறைய நகைச்சுவை காட்சிகளும் உண்டு. ஒரு சீனப்பெண்ணை கண்டவுடன் கம்யூனிச நாடு என்ற ஈர்ப்பில் மொழி தெரியாவிட்டாலும் அவரிடம் நட்புக்கொள்ள முயற்சி, பின்பு அதுவே மெல்லிய காதலாக மாறும் தருணம் என தென்றலாக கதை செல்லும். சீன பெண் கம்யூனிசத்திற்கு எதிரானவள், தன் காதலன் விடுதலைக்குதான் அவள் துபாய் வந்தாள் என அறிந்தவுடன், கம்யூனிச சிந்தாதப்படி தன் அத்தியாவசிய தேவைக்கு போக மீதி அனைத்தும் கஸ்டப்படும் மக்களுக்கே என தான் சிறுகச்சிறுக சேர்த்த பணத்தை அப்பெண்ணிற்கு கொடுப்பார்.


பல வருட இன்னல்களுக்கு இடையே இறுதியில், தன் செம்மனூர் நண்பர்கள் உதவியுடன் இந்த போலி கம்யூனிஸ்ட்டுகளை (ஊழல் தலைமை கருனான்ன், தொழிலதிபர் ஜெகதீ, இவர்களின் கூட்டுச்சதி, ஏமாற்றியவர்கள்) என நாட்டிற்கு அடையாளம் காட்டிவிட்டு, தன் உயிர்மூச்சான கம்யூனிசத்திற்கும், நாட்டிற்கும், தன் மக்களுக்கும் பாடுபட மீண்டும் ஊருக்கு திரும்புவார். 


மலையாளத்தில் துபாய் பற்றிய கதையைக்கொண்டு மம்முட்டி, மோகன்லால் என பலர் நடித்தும், நிறைய சினிமா தோல்வியடைந்துள்ளது. ஏனெனில் அவையெல்லாம் வெறும் ஆடம்பரமாக, சொர்க்க பூமியாக மட்டுமே காண்பிக்கப்பட்டது. எதார்த்த சினிமாவாக இல்லை.

அரபு தேசத்தில் வாழ்பவர்கள், இப்படத்தை காண நேரிட்டால், கண்களில் நீர்கோர்க்கும் என்பது உறுதி. வாசிக்கும் பழக்கமுள்ளவர்களுக்கு, இப்படம் தமிழ் நாவலான ‘ஆடு ஜீவிதம்மனதில் வருவதை தவிற்க முடியாதது.