ஞாயிறு, 4 நவம்பர், 2012

Road trip - ஹத்தா - ஃபுஜேரா - துபாய் (Part-3)

முந்தைய 2 பகுதிகளின் விவரங்களுக்கு....!!!

http://nondavan.blogspot.com/2012/10/road-trip.html
http://nondavan.blogspot.com/2012/11/road-trip-part-2.html

சென்ற பகுதியில் கூறியதுபோல், அந்த செங்குத்தான பள்ளத்தை கடந்தவுடனே, ஒரு ஒத்தையடி பாதையில் வண்டியை செலுத்தினான். நான் பதறிப்போய் நாம் வந்தது இந்த வழித்தடம் அல்ல, வண்டியை நிறுத்து சார்லஸ் என்று கதறும்போதே ஒரு பண்ணை தென்பட்டது.

சார்லஸ் நேரே பண்ணையின் பூட்டிய வாசலின் முன்பு வண்டியை நிறுத்திவிட்டு,  வா ஹரி நாத்தூர்கிட்ட போய் அனுமதி கேட்டு பார்க்கலாம் என்று மலையாலத்தில் பரைத்தான். :) (நாத்தூர் என்றால் நம் ஊரில் இருக்கும் காவலாளி அல்லது அனைத்தையும் பார்த்துக்கொள்ளும் ஒரு ஆள் என்பது பொருள்). ஒரு பாகிஸ்தானியர் நாத்தூராக இருந்தார். அவன் வருவதை கண்டவுடன், சார்லஸ் நான் ஏதோ ஹிந்தியில் பி.எச்டி. படித்தது போல நீயே பேசு ஹரி என்று என்னை கைக்காட்டினான். நம்ம ஹிந்திப்புலமை அபாரமானது... ’ஏக் மார் தோ துக்கடா’ என்ற ஒரு வாக்கியம் தான் முழுசா தெரியும், ஹிந்தியில்... :) :) :)

அந்த பாகிஸ்தானி நிறைய நேரம் என்னிடம் பேசினான்... நான் அவன் வாயை மட்டும் பார்த்துகிட்டே நின்னேன், சத்தியமா ஒன்னும் விளங்கலை....அரபி வர நேரமாச்சுன்னு மட்டும் பொத்தம்பொதுவா அர்த்தம் பண்ணிட்டேன். இப்போ நம்ம அவன்கிட்ட பேசனும். நான் ஹிந்தியை பிச்சு, கறியாக்கி, நூடுல்ஸ் செய்து ஹம் தேஷக்தே?? பீஸ் மினிட் பஸ் மேரே பாய்.. மேரா பேமாலி ஆயாதா...(அதாங்க ஃபேமிலி) சோட்டோ பச்சோக்கோ தேஷ்க்தேக்கேலியா, பகுத் அச்சான்னு....வாய்ல வந்தது எல்லாம் ஹிந்தின்னு பேசினேன்... நடுநடுவுல அவனும் பேசினான், நமக்கு புரியனுமே??. அவன் நம்ம ஹிந்தி பேசும் புலமையைக்கண்டு, மிரண்டுப்போய் ஓகேன்னு சொல்லிட்டான், சீக்கிரம் பார்த்துட்டு வந்திருங்க என்று சொன்னான்னு நினைக்கிறேன்.

எந்த எதிர்பார்ப்புமின்றி உள்ளே சென்றால் வாழ்வின் மிக உன்னதமான தருணத்தை உணர்ந்தேன். நாம் அதன் அழகில் அப்படியே லயத்துப்போனோம். நான் ஏதோ வேறோரு பூமியில் இருப்பது போன்று ஒரு கனநேர உணர்வு.
பண்ணையின் உள்ளே (அடர்ந்த மாங்காய் மரங்கள்)
நான் சிறுவயதில், கொங்கு நாட்டு வயக்காட்டில் சுற்றித்திரிந்தது அப்படியே மீண்டும் கால சுழர்ச்சியாக கண்முன்னே  வந்ததாக உணர்ந்தேன். எங்கு பார்த்தாலும் மாங்காய் மரங்கள், கருவேப்பிலை மரங்கள், ஈச்ச மரங்கள், அடர்ந்த புள்வெளிகள், நம்ம ஊரில் இருப்பது போல் சிறிய நீர் பாசன பாத்திக்கட்டு (வாய்க்கால்) என எல்லோருக்கும் இன்பதிர்ச்சியை கொடுத்தது. நம்ம வீட்டு அம்மணி, சளைச்சவங்களா என்ன? அங்கு இருக்கும் கருவேப்பிலை மரத்தில், ஒரு வாரத்திற்கான இலையை பறிச்சுட்டாங்க.... :) :)

வயல்வெளி
மாங்காய் மரத்தின் கீழ், என் மகன் யோகவ்
நீர் பாசன வாய்க்கால் (பாத்திக்கட்டு)
ஈச்ச மரங்கள் நிறைந்த தோட்டம்
யார் சொன்னது துபாய்ல புல்லு, பூண்டு கூட முளைக்காத பாலைவனம் என்று. முறையாக பராமரித்தால், எல்லாம் சாத்தியமே என்பதற்கோர் சிறந்த  உதாரணம், இந்த காட்சிகள். அதுவும் வெறும் மொட்டை மலைகளால் சூழ்ந்த ஒரு இடத்தில். அந்த நாத்தூர் மீண்டும் அங்கே வந்து, 30 நிமிடம் ஆகிவிட்டதாகவும், அரபி சற்று நேரத்தில் வருவதாக கூறினான். சரியென்று வெளியே வர மனமில்லாமால் நடையை கட்டினோம்.

வண்டியில் இதைப்பற்றியே சிலாகித்துக் கொண்டு வந்தோம். இதை நீங்களும் காணும்போது நிச்சயம் நான் அடைந்த பரவசம் நீங்களும் உணர்வீர்கள் என்பதில் எனக்கு சிறியளவு ஐயமும் இல்லை. அடுத்து, ஓமன் நாட்டின் எல்லையை கடந்து ஃபுஜேரா செல்ல தீர்மானித்தோம்.

இன்னொரு விஷயம் சொல்ல மறந்து விட்டேன். நம்ம ஊரைப்போல், வழி கேட்டு கேட்டு செல்லலாம் என்பது இங்கு முற்றிலும் இயலாத காரியம், அதுவும் இதுபோன்று பலரும் அறியப்படாத வழியென்றால் கிழிந்தது பொழப்பு... ஆகையால், கையில் GPS சிஸ்டம் கொண்ட மொபைலே தெய்வம். நாம் போகும் இடத்தை கொடுத்துவிட்டால் போதும், அதுவே நம்மளை முழுவதும் வழிநடத்தும்.

இன்று எங்கள் வாழ்வின் ஜாக்பாட் என்று தான் சொல்ல வேண்டும். நான் இதற்கு முன்னமே ஃபுஜேரா சென்றிருந்தாலும், இப்படி ஒரு வழித்தடம் கண்டதே இல்லை!!! , நாளா பக்கமும்  உயர்ந்த மலைகள், கண்ணுக்கு எட்டின தூரம் வரை ஆள் நடமாட்டமே இல்லை, ஆள் எதற்கு... ஒரு வண்டி கூட தென்படுவது இல்லை. அதன் நடுவே த்ரில் பயணம்.
செங்குத்தான த்ரில் நிறைந்த வழித்தடம்
நான், என் மகன் யோகவ் முன்னிருக்கையில் அமர்ந்துக்கொண்டோம். இங்கு பொதுவாக ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் முன்சீட்டில்  அமரக்கூடாது. மீறினால் அபராதம் நிச்சயம். ஆனால், நாம் தான் இந்தியர்களாச்சே... போலிஸ் இல்லையென்றால் ரூல்ஸை மீறுவோமே...!!! ஒரு தைரியத்தில் என் மகனை அமர சம்மதித்தேன். எனக்கும் அந்த த்ரில் ரைடில் ஒரு துணையாச்சு. அதுவும் வழியெல்லாம் சாகசம் செய்யும்படியாக சாலை எப்படியென்றால், வண்டி செல்லும்போது ஒரு குறிப்பிட்ட இடம்வரை தான், சாலை தெரிகிறது. அதற்கு அப்புறம் என்னவென்று தென்படவே இல்லை. எவ்வளவு முயன்றும், எவ்வளவு கிட்ட சென்றாலும், அத்தனை வேகத்திலும். மிக அருகில் சென்றால் பெரும் பள்ளம் போல் கீழே செல்லும் சாலைகள், நாம் ஜெயண்ட் வீலில் பயணம் செய்வது போல், திடீரென்று கீழ் நோக்கி செல்கிறது. செம்ம அனுபவம்....!!

ஜெயிண்ட் வீல் போல கீழ் நோக்கி செல்லும் ஒரு பகுதி
இப்படியாக பலப்பல சாகசம் நிறைய செய்துக்கொண்டு ’Wadi Al Helo Tunnel’ என்ற இடத்தை அடைந்தோம். இரண்டு பெரிய மலைகளை குடைந்து 1.6 கி.மீ நீளம் கொண்ட இந்த குகை, 2003ஆம் ஆண்டு மாற்று போக்குவரத்தாக சார்ஜா அரசால் கட்டப்பட்டது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் மிக நீலமான குகை (Tunnel) என்பது இதன் சிறப்பு. இந்த ரோட்டின் பெரும்பகுதி, சார்ஜாவிற்கு சொந்தமான பிராந்தியம் அது. நேரில் மிக பிரம்மிப்பாக இருக்கும்

பின்னால் இருக்கும் யுஅரிய மலையை கடந்து செல்ல குகை
வாதி ஹலோ டன்னல்

குகையின் உட்பகுதி
இந்த குகையை கடந்து சென்றால், நாம் ஊட்டி செல்வது போல கீழ்நோக்கி செல்லும்.மலைப்பாதை இருக்கும். கீழே ஒரு அழகிய கடற்கரை சார்ந்த சிறிய நகரம், கல்பா. நம் காரைக்கால் போல இந்த கல்பா ஊர் எங்கோ இருக்கும், சார்ஜா எங்கோ இருக்கும் , இதே போல் திப்பா என்ற ஊரும் சார்ஜாவிற்கு சொந்தமானது. ஆனால், இது இருப்பது வேறு இடத்தில். இதைப்பற்றி பின்னர் கூறுகிறேன். உங்களுக்கு எளிதில் விளங்க - உதாரணத்திற்கு, எப்படி காரைக்கால், மாகே என்ற ஊர்கள் எங்கோ இருந்தாலும், அது பாண்டிச்சேரிக்கு சொந்தம் என்கிறோம், அதே போலத்தான் கல்பாவும், திப்பா என்ற ஊரும்.

புதிய படகு சவாரி - கல்பா

கல்பா பீச்

கல்பா பீச்
கல்பா பீச்சும் நம் பாண்டிச்சேரி பீச்சை போல ரம்மியமாக இருக்கும் சமையத்தில், அதே போல் கருங்கற்களை வைத்து நிறப்பி உள்ளார்கள். இங்கு சற்று விளையாடிவிட்டு, பயணத்தை ஃபுஜேராவின் கோட்டைக்கு தொடர்ந்தோம்.

ஃபுஜேரா என்ற ஊர், 1952ஆம் ஆண்டுவரை சார்ஜாவின் கட்டுப்பாட்டில் இருந்தது. பின்னர் தனி எமிரேட்டாக உருவானது. இங்கு காணும் வீடுகள் எல்லாம், நம் இந்தியா போல் தோற்றமளிக்கும். மிகச்சாதாரண கட்டிடங்களோடு. பெரும்பாலும், தரைத்தளம் மட்டுமே.

ஃபுஜேரா கோட்டை -  இந்த நாட்டின் மிகப்பழமையான கட்டிடம் என அறியப்படுகிறது, தோராயமாக 1670ஆம் ஆண்டு இருக்கும். ‘கத்தாமா’ என்ற மலையாள படத்தில் காவ்யா மாதவன் ஜெயிலில் இருந்து வெளிவரும் காட்சி, இங்கு படமாக்கப்பட்டுள்ளது.

கோட்டையின் நுழைவாயிலில் யோகவ்
ஃபுஜேரா கோட்டை
மணி மாலை ஐந்தை தொட்டது. எங்கூட்டு அம்மணி, கோவத்தில் பொருமிக்கொண்டிருந்தாள். அதற்கு காரணம் நான் ஒன்றும் சாப்பிட வாங்கிக்கொடுக்கவில்லை. மாசக்கடைசியாதலால், டப்பு லேது. கிரெடிட் கார்ட் உள்ள கடை கண்ணுக்கு அகப்படவில்லை. விதி மீண்டும் கொடுயது பாஸ். கோவத்தின் உஸ்ணம் காரணமாக ஒரு சிறியக்கடையில் வண்டியை நிறுத்தி, ஜூஸ், சிப்ஸ், ஏழைகளின் சாண்ட்விட்ச் பரோட்டோ, ஒரு டீ வாங்கிக்கொடுத்து உஸ்ணத்தை சற்று தணித்தேன்.

பின்பு எங்கள் பயணத்தை உம்-அல்-குயின் என்ற எமிரேட்டிற்கு தொடர்ந்தோம். ஆனால் இருட்டாகிவிட்டதால், பெரிதாக இன்றும் காணமுடியவில்லை. ஒரு அருமையான பீச் இருந்தது. சிறிது நேரம் காற்று வாங்கிகொண்டே மிச்சமீதி நொறுக்குகளை அங்கு முடித்திவிட்டு வண்டியை கிளப்பினோம்.

இரவாகிவிட்டதால், ஒரு கிரெடிட் காட் இருக்கும் கடைக்கு சென்று செம கட்டுக்கட்டிவிட்டு அம்மணியின் கோபப்பார்வையில் தப்பித்து அஜ்மான், சார்ஜா வழியாக துபாய் அடைந்தோம்.

கட்டுரையின் நீளம் கருதி, இறுதியில் இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.:)

எங்கள் வாழ்க்கையில் மறக்க முடியா அனுபவத்தை கொடுத்த என் நண்பர் சார்லஸ்க்கு ஸ்பெசல் நன்றிகள்.

6 கருத்துகள்:

  1. பேச்சு நடையில் கட்டுரை மிக அருமை.....

    பதிலளிநீக்கு
  2. தம்பி உடையான், யாருக்கும் அஞ்சான்... தேங்ஸ் டா தம்பி

    பதிலளிநீக்கு
  3. மாசக்கடைசியாதலால், டப்பு லேது- நம்பள மாதிரி கலைகர்களுக்கு இந்த மதிரி சில சோதனைகள் வருவது சகஜம் தான் ஆனா அதலாம் நாம்ப பொருட் படுத்த கூடாது

    பதிலளிநீக்கு
  4. hahahahah.... நன்றி கிச்சா & ஹரிராம்

    பதிலளிநீக்கு
  5. அழகான எழுத்து நடை....வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு