வியாழன், 29 நவம்பர், 2012

Road trip - ஹத்தா - ஃபுஜேரா - துபாய் (Part-4)


ரோட் ட்ரிப் - டிட் பிட்ஸ்
  
* சென்ற கடைசி பகுதியில் கட்டுரையின் நீளம் கருதி, முடிவு நெருங்கும்போது சுருக்கமாக எழுதினேன். என் நண்பர்களின் வேண்டுக்கோளுக்கு இணங்க, விடுபட்டுப்போன சில பகுதிகளை இங்கு விரிவாகவும், சில டிட்-பிட்ஸாகவும் தருகிறேன்.

·         * ஹத்தா பண்ணையில் இருந்து மீண்டும் ஓமன் எல்லையை கடந்து செல்லும் போது, வழியில் ஒருத்தனும் காணவில்லை. ஈத் பண்டிகை சமயத்திலும் ரோடெல்லாம் வெறிச்சோடி கிடந்தது. செல்லும் சாலையோ செம திரில்லிங்கோட ஒரு சீ-சா போல மேலும் கீழும் போவதுமா இருக்கு. வண்டியில் ஐந்து பேர் இருப்பதால் சில மேட்டில் இழுப்பதற்கு முனங்கியது. ஆதலால் ஒரு ரோட்டின் பிரிவில் எங்கு போவது என்றொரு சந்தேகம் வந்தது. அந்த பிரிவில் ஒரு வழியாக ஃபுஜேராவிற்கும், மற்றொன்றில் உம்-அல்-குயின்கு செல்லலாம். ஏனெனில் ஃபுஜேரா வழி நிறைய சாகசம் நிறைந்தது போல இருந்தது.
  
·         * ஒரு சிறிய தயக்கத்திற்கு பிறகு, வண்டியை ஃபுஜேராவிற்கு செலுத்தலாம் என தீர்மானித்து GPSல் கொடுத்தோம். இந்த தைரியம் எப்படியென்றால், வண்டி தள்ளத்தான் கைவசம் நாலு பேர் இருக்கோமே என்று தான்!!! 

·         * ஒரு உண்மை என்னான்னா எங்க அம்மணிக்கு மட்டும் இது தெரிஞ்சது, நாலு நாள் உப்புமா போட்டு கொன்னுடுவாங்க...அதுவும் சட்னி இல்லாமல்... ஆங்...!! 

·         * இந்த வழியாக இரவில் பயணிப்பதை தவிர்க்கவும். எதிர்பாரா விதமாக வண்டிக்கு ஏதேனும் நேர்ந்தால், நம்ம கதி அதோ கதி தான்...!!

·       * GPS வழிகாட்டுதலில் பயணம் செய்துக்கொண்டிருந்தபோது Wadi Al Helo Tunnel என்ற குகையை நோக்கி வண்டி போகிறது என்று அறிந்தவுடன் மிகுந்த ஆனந்தம் அடைந்தோம். நாங்கள் பயணித்த வழித்தடம், துபாயில் இருந்து நிறையபேர் செல்லும் வழியில் ஒன்றிணைந்தது. 

·        * அந்த குகையை கடந்தவுடன், அருமையான வளைவுகளை கொண்ட சாலையில் பயணித்து, கல்பா ஊரை எட்டியது. அங்கு போட்டிங் வசதி செய்து சுற்றுலா ஸ்தலமாக சமீபத்தில் மாற்றிருக்கிறார்கள். 

·         * இந்த இடத்திலிருந்து நடக்கும் தூரம் தான் மற்றொரு ஓமன் எல்லை. கல்பா என்ற நகரம், ஓமனின் வடக்கு எல்லையை ஒட்டி இருக்கும் ஊர். 

·       * கல்பா, ஃபுஜேரா, கொர்ஃபகான் என்ற ஊர்கள், Gulf of Oman என்ற அரபிக்கடலின் ஒரு பகுதியானது. இது அசலில், நம் பாண்டிசேரி போல ஒரு பக்கம் முழுவதும் கடல், மறுபக்கம் நகரம் கொண்ட ஊர்கள்.

·         * கொர்ஃபகான் என்ற இடம், சுற்றுலாவிற்கு மிகவும் பிரசிப்பெற்ற ஊர். துபாயில் இருக்கும் அத்தனைபேரும், விடுமுறையென்றால் படையெடுக்கும் ஸ்தலம். அதன் காரணமாகவே இந்த இடத்திற்கு போவதை தவிர்த்தோம். Water Sports எனப்படும் விளையாட்டுகள் செம கலைக்கட்டும். பேரா கிலைடிங், வாட்டர் ஸ்கூட்டர், பனானா ரைட் போன்ற நீர் விளையாட்டுகள் ஆட சிறந்த இடம்.

     * ஃபுஜேராவில் உள்ள பழமைவாய்ந்த கோட்டையை கண்டபின்பு, துபாய் செல்லாமல், மீண்டும் ரூட்டை மாற்றி உம்-அல்-குய்ன் போக முடிவாயிற்று. ஒரு ஈ, காக்கா கூட இல்லாத மிக அற்புதமான ஏனைய பேர் அறியாத ரோடு. அருமையோ அருமை.

ஞாயிறு, 4 நவம்பர், 2012

Road trip - ஹத்தா - ஃபுஜேரா - துபாய் (Part-3)

முந்தைய 2 பகுதிகளின் விவரங்களுக்கு....!!!

http://nondavan.blogspot.com/2012/10/road-trip.html
http://nondavan.blogspot.com/2012/11/road-trip-part-2.html

சென்ற பகுதியில் கூறியதுபோல், அந்த செங்குத்தான பள்ளத்தை கடந்தவுடனே, ஒரு ஒத்தையடி பாதையில் வண்டியை செலுத்தினான். நான் பதறிப்போய் நாம் வந்தது இந்த வழித்தடம் அல்ல, வண்டியை நிறுத்து சார்லஸ் என்று கதறும்போதே ஒரு பண்ணை தென்பட்டது.

சார்லஸ் நேரே பண்ணையின் பூட்டிய வாசலின் முன்பு வண்டியை நிறுத்திவிட்டு,  வா ஹரி நாத்தூர்கிட்ட போய் அனுமதி கேட்டு பார்க்கலாம் என்று மலையாலத்தில் பரைத்தான். :) (நாத்தூர் என்றால் நம் ஊரில் இருக்கும் காவலாளி அல்லது அனைத்தையும் பார்த்துக்கொள்ளும் ஒரு ஆள் என்பது பொருள்). ஒரு பாகிஸ்தானியர் நாத்தூராக இருந்தார். அவன் வருவதை கண்டவுடன், சார்லஸ் நான் ஏதோ ஹிந்தியில் பி.எச்டி. படித்தது போல நீயே பேசு ஹரி என்று என்னை கைக்காட்டினான். நம்ம ஹிந்திப்புலமை அபாரமானது... ’ஏக் மார் தோ துக்கடா’ என்ற ஒரு வாக்கியம் தான் முழுசா தெரியும், ஹிந்தியில்... :) :) :)

அந்த பாகிஸ்தானி நிறைய நேரம் என்னிடம் பேசினான்... நான் அவன் வாயை மட்டும் பார்த்துகிட்டே நின்னேன், சத்தியமா ஒன்னும் விளங்கலை....அரபி வர நேரமாச்சுன்னு மட்டும் பொத்தம்பொதுவா அர்த்தம் பண்ணிட்டேன். இப்போ நம்ம அவன்கிட்ட பேசனும். நான் ஹிந்தியை பிச்சு, கறியாக்கி, நூடுல்ஸ் செய்து ஹம் தேஷக்தே?? பீஸ் மினிட் பஸ் மேரே பாய்.. மேரா பேமாலி ஆயாதா...(அதாங்க ஃபேமிலி) சோட்டோ பச்சோக்கோ தேஷ்க்தேக்கேலியா, பகுத் அச்சான்னு....வாய்ல வந்தது எல்லாம் ஹிந்தின்னு பேசினேன்... நடுநடுவுல அவனும் பேசினான், நமக்கு புரியனுமே??. அவன் நம்ம ஹிந்தி பேசும் புலமையைக்கண்டு, மிரண்டுப்போய் ஓகேன்னு சொல்லிட்டான், சீக்கிரம் பார்த்துட்டு வந்திருங்க என்று சொன்னான்னு நினைக்கிறேன்.

எந்த எதிர்பார்ப்புமின்றி உள்ளே சென்றால் வாழ்வின் மிக உன்னதமான தருணத்தை உணர்ந்தேன். நாம் அதன் அழகில் அப்படியே லயத்துப்போனோம். நான் ஏதோ வேறோரு பூமியில் இருப்பது போன்று ஒரு கனநேர உணர்வு.
பண்ணையின் உள்ளே (அடர்ந்த மாங்காய் மரங்கள்)
நான் சிறுவயதில், கொங்கு நாட்டு வயக்காட்டில் சுற்றித்திரிந்தது அப்படியே மீண்டும் கால சுழர்ச்சியாக கண்முன்னே  வந்ததாக உணர்ந்தேன். எங்கு பார்த்தாலும் மாங்காய் மரங்கள், கருவேப்பிலை மரங்கள், ஈச்ச மரங்கள், அடர்ந்த புள்வெளிகள், நம்ம ஊரில் இருப்பது போல் சிறிய நீர் பாசன பாத்திக்கட்டு (வாய்க்கால்) என எல்லோருக்கும் இன்பதிர்ச்சியை கொடுத்தது. நம்ம வீட்டு அம்மணி, சளைச்சவங்களா என்ன? அங்கு இருக்கும் கருவேப்பிலை மரத்தில், ஒரு வாரத்திற்கான இலையை பறிச்சுட்டாங்க.... :) :)

வயல்வெளி
மாங்காய் மரத்தின் கீழ், என் மகன் யோகவ்
நீர் பாசன வாய்க்கால் (பாத்திக்கட்டு)
ஈச்ச மரங்கள் நிறைந்த தோட்டம்
யார் சொன்னது துபாய்ல புல்லு, பூண்டு கூட முளைக்காத பாலைவனம் என்று. முறையாக பராமரித்தால், எல்லாம் சாத்தியமே என்பதற்கோர் சிறந்த  உதாரணம், இந்த காட்சிகள். அதுவும் வெறும் மொட்டை மலைகளால் சூழ்ந்த ஒரு இடத்தில். அந்த நாத்தூர் மீண்டும் அங்கே வந்து, 30 நிமிடம் ஆகிவிட்டதாகவும், அரபி சற்று நேரத்தில் வருவதாக கூறினான். சரியென்று வெளியே வர மனமில்லாமால் நடையை கட்டினோம்.

வண்டியில் இதைப்பற்றியே சிலாகித்துக் கொண்டு வந்தோம். இதை நீங்களும் காணும்போது நிச்சயம் நான் அடைந்த பரவசம் நீங்களும் உணர்வீர்கள் என்பதில் எனக்கு சிறியளவு ஐயமும் இல்லை. அடுத்து, ஓமன் நாட்டின் எல்லையை கடந்து ஃபுஜேரா செல்ல தீர்மானித்தோம்.

இன்னொரு விஷயம் சொல்ல மறந்து விட்டேன். நம்ம ஊரைப்போல், வழி கேட்டு கேட்டு செல்லலாம் என்பது இங்கு முற்றிலும் இயலாத காரியம், அதுவும் இதுபோன்று பலரும் அறியப்படாத வழியென்றால் கிழிந்தது பொழப்பு... ஆகையால், கையில் GPS சிஸ்டம் கொண்ட மொபைலே தெய்வம். நாம் போகும் இடத்தை கொடுத்துவிட்டால் போதும், அதுவே நம்மளை முழுவதும் வழிநடத்தும்.

இன்று எங்கள் வாழ்வின் ஜாக்பாட் என்று தான் சொல்ல வேண்டும். நான் இதற்கு முன்னமே ஃபுஜேரா சென்றிருந்தாலும், இப்படி ஒரு வழித்தடம் கண்டதே இல்லை!!! , நாளா பக்கமும்  உயர்ந்த மலைகள், கண்ணுக்கு எட்டின தூரம் வரை ஆள் நடமாட்டமே இல்லை, ஆள் எதற்கு... ஒரு வண்டி கூட தென்படுவது இல்லை. அதன் நடுவே த்ரில் பயணம்.
செங்குத்தான த்ரில் நிறைந்த வழித்தடம்
நான், என் மகன் யோகவ் முன்னிருக்கையில் அமர்ந்துக்கொண்டோம். இங்கு பொதுவாக ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் முன்சீட்டில்  அமரக்கூடாது. மீறினால் அபராதம் நிச்சயம். ஆனால், நாம் தான் இந்தியர்களாச்சே... போலிஸ் இல்லையென்றால் ரூல்ஸை மீறுவோமே...!!! ஒரு தைரியத்தில் என் மகனை அமர சம்மதித்தேன். எனக்கும் அந்த த்ரில் ரைடில் ஒரு துணையாச்சு. அதுவும் வழியெல்லாம் சாகசம் செய்யும்படியாக சாலை எப்படியென்றால், வண்டி செல்லும்போது ஒரு குறிப்பிட்ட இடம்வரை தான், சாலை தெரிகிறது. அதற்கு அப்புறம் என்னவென்று தென்படவே இல்லை. எவ்வளவு முயன்றும், எவ்வளவு கிட்ட சென்றாலும், அத்தனை வேகத்திலும். மிக அருகில் சென்றால் பெரும் பள்ளம் போல் கீழே செல்லும் சாலைகள், நாம் ஜெயண்ட் வீலில் பயணம் செய்வது போல், திடீரென்று கீழ் நோக்கி செல்கிறது. செம்ம அனுபவம்....!!

ஜெயிண்ட் வீல் போல கீழ் நோக்கி செல்லும் ஒரு பகுதி
இப்படியாக பலப்பல சாகசம் நிறைய செய்துக்கொண்டு ’Wadi Al Helo Tunnel’ என்ற இடத்தை அடைந்தோம். இரண்டு பெரிய மலைகளை குடைந்து 1.6 கி.மீ நீளம் கொண்ட இந்த குகை, 2003ஆம் ஆண்டு மாற்று போக்குவரத்தாக சார்ஜா அரசால் கட்டப்பட்டது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் மிக நீலமான குகை (Tunnel) என்பது இதன் சிறப்பு. இந்த ரோட்டின் பெரும்பகுதி, சார்ஜாவிற்கு சொந்தமான பிராந்தியம் அது. நேரில் மிக பிரம்மிப்பாக இருக்கும்

பின்னால் இருக்கும் யுஅரிய மலையை கடந்து செல்ல குகை
வாதி ஹலோ டன்னல்

குகையின் உட்பகுதி
இந்த குகையை கடந்து சென்றால், நாம் ஊட்டி செல்வது போல கீழ்நோக்கி செல்லும்.மலைப்பாதை இருக்கும். கீழே ஒரு அழகிய கடற்கரை சார்ந்த சிறிய நகரம், கல்பா. நம் காரைக்கால் போல இந்த கல்பா ஊர் எங்கோ இருக்கும், சார்ஜா எங்கோ இருக்கும் , இதே போல் திப்பா என்ற ஊரும் சார்ஜாவிற்கு சொந்தமானது. ஆனால், இது இருப்பது வேறு இடத்தில். இதைப்பற்றி பின்னர் கூறுகிறேன். உங்களுக்கு எளிதில் விளங்க - உதாரணத்திற்கு, எப்படி காரைக்கால், மாகே என்ற ஊர்கள் எங்கோ இருந்தாலும், அது பாண்டிச்சேரிக்கு சொந்தம் என்கிறோம், அதே போலத்தான் கல்பாவும், திப்பா என்ற ஊரும்.

புதிய படகு சவாரி - கல்பா

கல்பா பீச்

கல்பா பீச்
கல்பா பீச்சும் நம் பாண்டிச்சேரி பீச்சை போல ரம்மியமாக இருக்கும் சமையத்தில், அதே போல் கருங்கற்களை வைத்து நிறப்பி உள்ளார்கள். இங்கு சற்று விளையாடிவிட்டு, பயணத்தை ஃபுஜேராவின் கோட்டைக்கு தொடர்ந்தோம்.

ஃபுஜேரா என்ற ஊர், 1952ஆம் ஆண்டுவரை சார்ஜாவின் கட்டுப்பாட்டில் இருந்தது. பின்னர் தனி எமிரேட்டாக உருவானது. இங்கு காணும் வீடுகள் எல்லாம், நம் இந்தியா போல் தோற்றமளிக்கும். மிகச்சாதாரண கட்டிடங்களோடு. பெரும்பாலும், தரைத்தளம் மட்டுமே.

ஃபுஜேரா கோட்டை -  இந்த நாட்டின் மிகப்பழமையான கட்டிடம் என அறியப்படுகிறது, தோராயமாக 1670ஆம் ஆண்டு இருக்கும். ‘கத்தாமா’ என்ற மலையாள படத்தில் காவ்யா மாதவன் ஜெயிலில் இருந்து வெளிவரும் காட்சி, இங்கு படமாக்கப்பட்டுள்ளது.

கோட்டையின் நுழைவாயிலில் யோகவ்
ஃபுஜேரா கோட்டை
மணி மாலை ஐந்தை தொட்டது. எங்கூட்டு அம்மணி, கோவத்தில் பொருமிக்கொண்டிருந்தாள். அதற்கு காரணம் நான் ஒன்றும் சாப்பிட வாங்கிக்கொடுக்கவில்லை. மாசக்கடைசியாதலால், டப்பு லேது. கிரெடிட் கார்ட் உள்ள கடை கண்ணுக்கு அகப்படவில்லை. விதி மீண்டும் கொடுயது பாஸ். கோவத்தின் உஸ்ணம் காரணமாக ஒரு சிறியக்கடையில் வண்டியை நிறுத்தி, ஜூஸ், சிப்ஸ், ஏழைகளின் சாண்ட்விட்ச் பரோட்டோ, ஒரு டீ வாங்கிக்கொடுத்து உஸ்ணத்தை சற்று தணித்தேன்.

பின்பு எங்கள் பயணத்தை உம்-அல்-குயின் என்ற எமிரேட்டிற்கு தொடர்ந்தோம். ஆனால் இருட்டாகிவிட்டதால், பெரிதாக இன்றும் காணமுடியவில்லை. ஒரு அருமையான பீச் இருந்தது. சிறிது நேரம் காற்று வாங்கிகொண்டே மிச்சமீதி நொறுக்குகளை அங்கு முடித்திவிட்டு வண்டியை கிளப்பினோம்.

இரவாகிவிட்டதால், ஒரு கிரெடிட் காட் இருக்கும் கடைக்கு சென்று செம கட்டுக்கட்டிவிட்டு அம்மணியின் கோபப்பார்வையில் தப்பித்து அஜ்மான், சார்ஜா வழியாக துபாய் அடைந்தோம்.

கட்டுரையின் நீளம் கருதி, இறுதியில் இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.:)

எங்கள் வாழ்க்கையில் மறக்க முடியா அனுபவத்தை கொடுத்த என் நண்பர் சார்லஸ்க்கு ஸ்பெசல் நன்றிகள்.

வியாழன், 1 நவம்பர், 2012

Road trip - ஹத்தா - ஃபுஜேரா - துபாய் (Part-2)

பகுதி-1 பற்றிய விவரங்களுக்கு
http://nondavan.blogspot.com/2012/10/road-trip.html

சென்ற பகுதியில் கூறியது போல், ஓமன் நாட்டின் எல்லையைக் கடக்க நம் போட்டோ ஒட்டிய அடையாள கார்டை காண்பிக்க வேண்டும். எமிரேட்ஸ் ஐடி கார்ட் அல்லது பாஸ்போர்ட் விசா பேஜுடன். (எமிரேட்ஸ் ஐடி கார்ட் என்பது இந்த ஊரில் வசிக்கும் நபர்களுக்கு தரப்படும் ஐடி கார்ட்)

இங்குதான் ஒரு சிறிய சிக்கல் காத்திருந்தது. எங்கூட்டு அம்மணி, என் பையனின் ஐடி கார்டை தொலைத்துவிட்டாள். கிளம்பும் அவசரத்தில் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. பிறகு வேறென்ன, சண்டை தான் :) :)

சரியென்று ஒரு முடிவோடுதான் எல்லையை கடக்க சென்றோம். ஒரு வேளை நாம் பிடிபட்டால், போலீஸ் எங்களை எல்லையை கடக்க அனுமதிக்க மாட்டார்கள். நம் வாகனத்தை திருப்பி துபாய்க்கே போகச் சொல்வார்கள். பக்பக்கென்று ஹார்ட் பீட் வேகமாக அடிமனதில் அடித்தது. வெளியே காட்டிக்காமல் என் ஐடி கார்ட், என் நண்பர் சார்லஸின் ஐடி கார்ட் காண்பித்தபின் அந்த போலீஸ் போகச்சொல்லிட்டான். காரணம், நாங்க பெரிய பிஸ்தாக்கள் என்று நினைக்க வேண்டாம் :).

போலீஸ்காரர் பின்சீட்டில் பெண்கள், குழந்தை இருப்பதை கண்டு, ஃபேமிலி என்றவுடன் ஓகே செல்லுங்கள் என்று கூறிவிட்டார். இங்கே நான் சொல்ல விரும்புவது, இந்த நாட்டில் பெண்களுக்கு தான் முதல் மரியாதை. பெண்களை அவ்வளவு மதிப்பார்கள். குடும்பமாக சென்றால் எல்லா இடத்திலும் கூடுதல் மரியாதை நிச்சயம் கிடைக்கும், இதை கண்கூடாக நீங்க உணர முடியும். நான் கூறுவதற்கு இதுவே ஒரு நேரடி சாட்சி.

எல்லையை கடந்தவுடன், மனதில் ஒரு நிஷாந்தம் உருவானது. பின்பு ஒரு பெட்ரோல் பங்கில் வண்டியை நிறுத்திவிட்டு, நொறுக்குத்தீனி, தண்ணி பாட்டில்கள், காபி என்று உண்டு ரிலேக்ஸ் செய்துக் கொண்டோம். வண்டிக்கு பெட்ரோல் ஃபுல் டேங்க் அடித்துக்கொண்டோம். சென்ற பகுதியில் கூறினேன் அல்லவா... பெட்ரோல் சிறிதளவு தான் போட்டுக்கொண்டு கிளம்பினோம் என்று, யூகித்தீர்களா??? ஆம், துபாயை விட, ஓமனில் பெட்ரோல் விலை இன்னும் குறைவு. துபாயில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 24ரூபாய், அதுவே ஓமனில் 15ரூபாய், நம் இந்திய ரூபாயின் ஒப்பீட்டின் மதிப்பில்.

சிறிது நேரத்தில் ஹத்தா டவுனை அடைந்தோம்.
ஹத்தா டவுன்
இது துபாயை விட முற்றிலும் மாறுபட்ட அனுபவத்தை கொடுக்கும் ஊர். துபாயில் எங்கு பார்த்தாலும் உயர்ந்து நிற்கும் வானளாவிய கட்டிடங்கள் நிறைந்தது. ஆனால் இங்கு எல்லா வீடுகளும், அலுவலகக் கட்டிடங்களும் தரைதளம் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. இல்லையெனில் முதல் மாடி கொண்ட மிகச்சிறியளவிளான கட்டிடங்கள். அதுவும் அரபிகளின் கட்டிட கலைகளை சார்ந்தவைகள் இதன் சிறப்பு. ஹத்தாவை ஏன் ’நாட்டின் பாரம்பரிய டவுன்’ என்று அழைக்கிறோம் எனக் காணும்போது தான் புரிகிறது. நான் சொல்வதைவிட, நீங்களே படத்தை காணுங்கள்.
அரபி கட்டிட கலையில் இருக்கும் கட்டிடங்கள்
குடியிருப்பு வீடுகள்
குடியிருப்பு வீடுகள்
 இப்பொழுது எங்கள் பயணம், ஹத்தா டேமை நோக்கி நகர்ந்தது. போகும் வழியில் ஹத்தாவின் மிகப்பழமையான ராணுவ கோட்டை (Military Fort) மற்றும் ஜும்மா மசூதி கட்டிடத்தைக் காண நேர்ந்தது. இது 1780ஆம் ஆண்டு கட்டப்பட்டதாக அறிகிறேன். இதற்கு கீழே ஒரு பெரிய விளையாட்டு மைதானம் தற்போது அமைத்துள்ளார்கள், சுற்றுலா வரும் நபர்களை கவர. என் மகன் அதைக்கண்டால் ஒரு மணி நேரத்தை விழுங்கி விடுவான். ஆதலால், நேரம் இல்லாத காரணத்தால் ஒரு புகைப்படும் மட்டும் எடுத்துக்கொண்டு வண்டியை டேம் (Dam) அமைந்திருக்கும் மலையில் ஏற்றினோம்.

Military Fort (Oldest Building in Hatta)


மிக அருமையான வழித்தடம். இதில் பயனித்தபோது, எனக்கு கோவை மருதமலை உச்சிக்கு செல்ல அடிவாரத்தில் இருந்து மேலிருக்கும் கோயிலுக்கு போக ஒரு சிறப்பு வழித்தடம் இருக்கும். அதில் பயணித்த நினைவலைகள் வந்தது. முதலில் வளைந்து வளைந்து செல்லும் பாதை, இறுதியில் செங்குத்தாக ஏறும். எங்கள் வண்டி, இறுதியில் செங்குத்தான பகுதியில் ஓவர்லோட் காரணமாக இழுக்கவில்லை.  எல்லோரும் இறங்கி படிக்கட்டில் நடக்க ஆரம்பித்தோம். சார்லஸ் & யோகவ் மட்டும் காரில் மேலே சென்றார்கள்.
டேம் மேல செல்லும் படிக்கட்டு பாதை
மூச்ச்சிரைத்து நிற்கும் என் தங்கைகள்

மேலே போய், அங்க போலாம் என்று சும்மா பீலாவிடும் நான்




 இந்நேரம் உங்க மனதில் ஒரு கேள்வி உதயமாகிருக்கும் என நினைக்கிறேன். வறண்ட பாலைவனத்தில் இருக்கும் ஊருக்கு எதற்கு நீர்தேக்கும் டேம் என்று... ???? ஏற்கனவே சொன்னதுபோல் ஹத்தா என்ற டவுன், மலைகளை சுற்றியுள்ள பகுதி. நீங்கள் அறியாத உண்மையொன்று உண்டு. அது துபாயில், குளிர்காலத்தில் வருடத்திற்கு இரண்டு நாள் நிச்சயம் மழை பெய்யும்.

இங்கு ஒரு வேளை அடைமழை வந்தால், பெய்யும் மழைக்கு ஒரு வடிகால் தேவையல்லவா??? சுற்றியிருப்பவைகள் எல்லாம் மொட்டை மலைகள், நீர் தேங்க வாய்ப்பேயில்லை. ஊரில் வெள்ளம் வராமல் மக்களைக் காக்க வேண்டும், மேலும் மவராசன் ஷேக்கிடம் பணம் இருக்கு. அப்புறம் என்ன, 1989ஆம் ஆண்டு கட்டிட்டாங்க டேம்.

ஹத்தா டேம் (Hatta Dam)



Another View
மேலே உள்ள புகைப்படத்தை பார்க்கும் போது, இது எங்கோ ஒரு திரைப்படத்தில் கண்டதைப் போல் உணர்கிறீர்களா? நானும் பலப் படத்தில் இந்த இடத்தை காணும்போது,  இது துபாய் என அறிவேன், ஆனால் எங்கு என்று தெரியாமல் பல நாட்கள் மண்டை குழம்பி இருந்துள்ளேன்.

நீங்கள் கணித்தது சரிதான். ‘நான் அவன் இல்லை’ படத்தில் சினேகா நடித்த ’ஏன் எனக்கு மயக்கம்’ என்ற பாடல் காட்சி நியாபகம் வருதா??? அதே, அதே..... இந்த டேமில் நிறைய சினிமா பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. அதில் அதுவும் ஒன்று.

சினேகா பாடிய பாட்டு நியாபகம் வருதா????
அந்த பாட்டின் வீடியோ லிங்க் இதோ.
http://www.youtube.com/watch?v=HCFjKWH-2p8

மேலும், இந்த இடத்தில் எடுத்த சில சினிமா பாடல் காட்சிகள் உங்க பார்வைக்காக தருகிறேன்.

ஏன் எனக்கு மயக்கம் பாடல் - நான் அவன் இல்லை -1 (தமிழ்)
பாக உன்னாரா பாடல் - நான் அவன் இல்லை -2 (தமிழ்)
சதுஅ, ஏமிடோ - அதிதி (தெலுங்கு)
முதல்முறை பார்த்தேன் - பிரியசகி (தமிழ்)
மொகவாடா மாதி போயேரா - அல்லாரி புல்லூடு ி (தெலுங்கு)
அப்போ வீடூ எந்த்தோ - ஒக்கடுன்னாடு ி (தெலுங்கு)
யாமினி - ஆறுமுகம் (தமிழ்)
மனசில் மனசில் - நம் நாடு (தமிழ்)
கர் தூன் கமால் - முஜ்ஷே ஷாதி கரோகி ் (ஹிந்தி)
யே கௌன் ஆயா மேரே தில் மைன் - சௌடா - தி டீல் ் (ஹிந்தி)
ஜப் கபி - 36 சைனா டவுன் (ஹிந்தி)

இந்த டேமில் வருடம் முழுவதும் நீர் தேங்கி இருப்பது,ஆச்சர்யமே...!!! நாம் டேமின் அடியில் சென்று நீரில் விளையாடலாம். நீர், நம் முழங்கால் அளவு தான் இருக்கும். ஆகையால் ஆபத்தேதும் இல்லை. மிக மிக அற்புதமான இடம். சந்தர்ப்பம் இருப்பின், சென்று வாருங்கள், தவற விடக்கூடாத ஒரு இடம். துபாயில் வசிக்கும் பலப்பேருக்கு இந்த இடம் இன்னும் தெரியாது என நினைக்கிறேன்.

நாங்கள் திரும்பும் வேளையில் நல்ல கூட்டம் கூடிவிட்டது. மிகவும் சிரமப்பட்டு வண்டியை திருப்பி இறக்கினான், சார்லஸ். அடுத்து கீழே இறங்கும்போது, என் நண்பன் இங்கு அரபிகளின் ஏராளமான பண்ணை வீடுகள் இருக்கு. யாருடனேனும் உள்ளே செல்ல கேட்டு பார்க்கலாம் என்று கூறினான். சம்மதித்தால் உள்ளே ஒரு ரவுண்ட் சென்று வரலாம் என முடிவு செய்து ஒரு ஃபார்ம் ஹவுஸ்க்கு சென்றோம்.

இன்னும் ஒரு பகுதி மட்டும் தான் இருக்கு... உங்களை போட்டு தாளிக்க மாட்டேன் :) :)