வியாழன், 13 டிசம்பர், 2012

கண்ணா..!!! துபாயில் ஃபிஷ் பிரியாணி திங்க ஆசையா..!!

அரபு தேசத்தில் வாழ்பவர்களுக்கு இந்த தலைப்பின் வசீகரம் தெரியும். ஒரு புன்முறுவலோடு அடப்பாவி, எந்த ஆடு சிக்கப்போகுதோ என மனதில் நினைத்துக்கொள்வார்கள்.

ஏன் இந்த தலைப்பு என்று புரியாதவர்களுக்கு, சிறிய விளக்கம் இதோ!

நம் ஊரில் மாமியார் வீட்டிற்கு போகனுமா என்பதை தான் இங்கு ஃபிஷ் பிரியாணி திங்க போறியா என கேட்பது... :) :) :)


 துபாய், சொர்க்க பூமி என்பதில் மாற்று கருத்தேதும் இல்லை. நிறைய சுதந்திரம் நிச்சயம் இருக்கு, அடுத்தவரை சீண்டாத வரையிலும்.  சரி, சட்டுபுட்டுன்னு விஷயத்திற்கு வருவோம். இங்கு இலவசமாக ஃபிஷ் (மீன்) பிரியாணி திங்க ஆசைப்படும் நபர்கள், தவறாமல் செய்ய வேண்டியவைகள் கீழே...!!

குறிப்பு : பின்விளைவுகளுக்கு, என்ற கம்பேனி பொறுப்பல்ல...

1. இங்கு பெண்களே உயர்ந்தவர்கள். அனைத்து ஆண்களும் அவர்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். ஆதலால் அவங்களை முதலில் திட்டிவிடுங்கள். உடனே பிரியாணி கேரண்டி

2. ’For Ladies Only' என்று போர்ட் இருக்கும் இடத்திற்கு சென்று அங்கு என்ன இருக்கு என ஆராயலாம்

3. ஒரு ஃபிகரை, பெண்ணை வெறிச்சு பார்த்தா போதும்

4. லிஃப்டில் பெண் தனியாக செல்லும் போது, அதில் நாமும் பயணிக்கலாம். குறிப்பாக அரபி பெண் இருக்கும் லிஃப்ட் என்றால் சாலச்சிறந்தது. :)

5. அரபி பெண்களுடன் முதலில் முந்திரி கொட்டைத்தனமாக கைக்குலுக்குவது, பயன் தரக்கூடும்

6. அரபியை தொட்டு பேசுவது, யாராக இருந்தாலும்... 

7. ரோட்டில் எவன் சட்டையையோ பிடித்து டேய், நீ என்ன பெரிய பாடா என கேட்கலாம்

8. பொதுவில் கிஸ் அடித்தால், நம் மாமன் உடனே வருவான்

9. ச்சே, எப்படி பப்லிக்கில் கிஸ் அடிப்பது என தயக்கம் என்றால், கட்டிப்பிடித்தாலும் விமோச்சனம் உண்டு. குறிப்பு  - உங்க காதலி, மனைவியா இருந்தாலும் டீலிங் இதே தான்

10.  கில்மா மேட்டர் செய்து ஃபிஷ் பிரியாணி ருஷியை அறியலாம். ஆனால், இதற்கு அடுத்த ஆள் போட்டுக்கொடுக்கனும் :) எப்படியும் நாம வாய் திறக்க மாட்டோம்

11. வாய்ல சனி உட்கார்ந்தா பலன் உடனே நிச்சயம். கருத்து கந்தசாமியா மதம்., இவர்களின் உடை, ஷேக் மவராசன், கலாச்சாரம் என நம்ம பிஸ்தை, காட்டலாம்.

12. நம்ம காலை, ஷூவை அவர்களை நோக்கி காட்டலாம். எதேச்சையா காட்டினாலும் பிறவிப்பயன் உண்டு. அவர்களை அவமானம் படுத்திய பெருமைக்கு ரிவார்ட்

13. அரபி இருக்கும் திசையில் நம் ஆவேச குரலில் பேசலாம்.

14. சைகையில் மிரட்டினாலும், நம்ம அண்ணன் விசயகாந்த் போல வாய சுலட்டி சுலட்டி காட்டினாலும், நடுவிரலை காட்டினாலும், ஆண்டவன் அணுகிரகத்தால் பிரியாணி கிட்டும்

15. பெர்முடாஸ் போட்டுக்கொண்டோ அல்லது பெண்கள் முட்டிக்கு மேல் ஸ்கர்ட் போட்டுக்கொண்டோ மால்களில் சுத்தலாம்

16. முஸ்லீம் அல்லாதவர்கள், அவர்களின் கோவிலுக்கு (மசூதி) செல்ல முற்படலாம். அல்லது குரான் புத்தகத்தை எடுத்து அவர்களுக்கு காண்பிக்கலாம்

17. ரம்ஜான் நோம்பு சமயத்தில், தண்ணீரோ, சிவிங் கம்மோ, அல்லது ஏதேனும் தின்பண்டம் சாப்பிடலாம்

18. இது நமக்கு ஒத்து வராது, இருந்தாலும் துணிந்த நவநாகரீக பெண்களுக்கு...... பீச்சில் டாட்லஸாகவோ, அல்லது பிகினி உடையிலோ ஒரு வாக் போகலாம்

19. முஸ்லீம் ஒருவர் சாமி கும்மிடும் போது, அவரை தாண்டி சென்றோ அல்லது அவர் முன் நின்று வெறிக்க பார்த்தாலும் பயன் கிட்டும்

20. அரபு வீட்டிற்கு போகும் போது, ஷூ காலோடு சென்று நம் ஏழரையை கூட்டிக்கலாம்

21. தண்ணியடித்துவிட்டு ’ஓஓஓஒ’ என நடுரோட்டில் கத்தலாம்

22. இது கஸ்டம் என கருதினால், ஒரு சிறிய சௌண்ட் விட்டால் கூட போதும்

23. அப்புறம் ரொம்ப ஈஸியா நேரா பிரியாணி தான் வேனும் என்றால், ஏர்போர்ட்டில் இருந்து செல்ல கசகசா, வெள்ளை பவுடர் போன்று எதாவது, டாக்டர் ஸ்லிப் இல்லாத மருந்துகள் என கொண்டுவரலாம்.

24. நம் குழந்தையையோ மனைவியையோ ஓங்கி அடித்து, பக்கத்து வீட்டுக்காரன் கூவினாக்கூட பலனை எதிர்பார்க்கலாம்

25. யாராக இருந்தாலும் ஒரு சிறிய ரத்தம் வர மாதிரி சண்டை, சச்சரவுக்கு காரணமாக இருந்தால் போதும்

26. ஜீப்ரா கிராஸிங்கில் ரோட்டை கடக்காமல், தேமே என்று நடுரோட்டில் ரோட் கிராஸ் செய்து நம் புண்ணியத்தை சோதிக்கலாம்

27. நம் குழந்தையை ரோட்டில் தவறவிட்டால் அல்லது எதேச்சையாக நம்மை அறியாமல் அவர்கள் ரோட்டை கடந்தால், பெற்றோருக்கு ஒரு வாரம் கேரண்டி (பேரண்டிங் கிளாஸ் உ ண்டு). unattended child at public place is punishable

28. மது அருந்திவிட்டு காரை தொட்டால், ஃபிஷ் பிரியாணி கேரண்டி

29. மதுவை வீட்டில் வைத்திருந்தாலும் இதே கதி தான்.

30. ஹோம் தியேட்டர் இருக்கே என்று, ஓவர் சௌண்ட் வைத்து பக்கத்து வீட்டுக்காரனை தூங்க விடாமல் செய்யலாம்

31. அனுமதிக்கப்பட்ட வேகத்தை விட, ஓவர் ஸ்பீடாக வண்டி ஓட்டினால் நம்மை அங்கேயே வந்து அழைத்துச்செல்வார்கள்.

இன்னும் நிறைய வழிமுறைகள் இருக்கு. இதை நான் ஜாலியாக சொன்னாலும் அனைத்தும் முக்கியமானதே...!!!

மேற்கூறியவையை கனவிலும் இங்கு முயலாதீர்கள். இவை எல்லாம் குற்றமாக கருதப்படுகிறது. நம்ம பொடனிக்கு பின்னாடி நிக்குறவன் மாதிரியே, உடனே வந்துவிடுவார்கள், இங்கு உள்ள காவல்துறையினர். அவர்களின் நேர்மை, சேவை பாரட்டத்தக்கது. அப்பாடா....!!!


இதே போல, புதிதாக வருபவர்கள் செய்ய வேண்டிய விஷயங்கள், ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய நிலைகள், இங்கிருக்கும் மாற்றங்கள்,  நாம் எதிர்கொள்ளூம் சிக்கலகள் என உங்கள் ஆதரவு இருப்பின் தொடர்கிறேன்.

செவ்வாய், 11 டிசம்பர், 2012

Maryada Ramanna - Telegu Movie Review

மரியாதை ராமண்ணா - தெலுங்கு படம்

ஒரு மாறுதலுக்காக என்னை வயிறு குலுங்க குலுங்க சிரிக்க வைத்த தெலுங்கு படம் உங்களுக்ககாக பகிர்கிறேன். இந்த படம் பார்க்க தூண்டும் முதல் காரணி, நம்ம ‘நான் ஈ’ பட புகழ் இயக்குனர் S.S. ராஜமௌலி 2010ல் இயக்கி வெளிவந்த படம். இதுவரை இவர் இயக்கிய அனைத்து படங்களுமே தெலுங்கில் சூப்பர் டூப்பர் ஹிட்டுகள் தான். ஒரு காமெடியான நடிகர் சுனிலை ஹீரோவாக்கி தெலுங்கில் கலக்கியெடுத்த படம்.

இப்படம் மராட்டி, பெங்காலி, சமீபத்தில் சன் ஆப் சர்தார் என ஹிந்தியில் ரீமேக்கிய படம். நம் நடிகர் விவேக் கூட , தமிழ் ரீமேக்கில் நடிப்பதாக கேள்விப்பட்டேன்.

கதையென்று பார்த்தால், அரதப்பழசான பலிக்கு பலி கதைதான். படத்தின் முதல் 10 நிமிடம் பார்த்தால், என்னடா இது....??? இதையா இவன் இப்படி சிலாகித்து எழுதினான் என என்னை காரி துப்புவீர்கள். அதே கிராமத்து குடும்ப தகராறு, மச்சான் மாப்பிள்ளை வெட்டு குத்து சண்டை, பகைக்கு பயந்து குழந்தையுடன் தாய் வெளியூருக்கு ஓட்டம், பின்பு ஹீரோவின் ஏழ்மை என அனைத்தும் கிளிஷே காட்சிகளாக இருக்கும்.

ஆனால் ஹீரோவான சுனில், கிராமத்தில் தனது அன்னைக்கு சொந்தமான ஒரு இடம் இருக்கு என தகவல் அறிந்தவுடன், அதை விற்று தன் ஏழ்மையை சிறிது போக்கிக்கொள்ளலாம் என ஊருக்கு கிளம்பும் போது ஆரம்பிக்குது சரவெடி.

தன் சொந்த ஊரான ராயலசீமா பகுதிக்கு 27 வருடம் கழித்து செல்கிறார். (ராயலசீமா என்பது நம் படத்தில் காட்டும் மதுரை போல, எதற்கெடுத்தாலும் கத்தி, வீச்சு, அரிவால் என் தெலுங்கில் ஃபேமஸ்). அங்கு தன் தம்பியை கொன்ற குடும்பத்தை வேருடன் அறுத்து பலி வாங்க 27 வருடம் காத்திருக்கும் ஊர் பெரியவரான வில்லனனிடமே (Nagineedu) போய் நிலம் விற்க உதவி கேட்டு, அவர் வீட்டிற்கு விருந்திற்கு செல்லும் போது இருந்து நம் வயிறு பதம் பார்க்க ஆரம்பித்துவிடும்.

கற்பனை செய்து பாருங்கள். ஒரே ஒரு வீடு, மொத்த படத்தையும் சிறிதும் போர் அடிக்காமல் நகர்த்த செம சாமர்த்தியம் வேண்டும். அதை அலாட்டாக செய்து ஜெயித்தார்கள்.

வில்லனுக்கு ஒரு பிரத்தேக குணமுண்டு. தன் வீட்டிற்கு எதிரியே வந்தாலும், நன்கு உபசரித்து வாயார புகழுமாறு உபசரிப்பார். வீட்டின் வாசப்படியை தாண்டியவுடன் தான் அருவாளை எடுப்பார். இதை ஹீரோ தனக்கு சாதகமாக்கிக்கொண்டு வீட்டை விட்டு வெளியே வராமல் அடிக்கும் கூத்துக்கள் தான் முழுப்படமே.


தான் இத்தனை வருடம் காத்திருப்பது நம் வீட்டில் இருப்பருக்கு தான் என வில்லனுக்கு தெரிந்தபின், இந்த இருவர் விளையாடும் Cat and Mouse விளையாட்டே முழுப்படமும். இதில் ஹீரோ வெளியேறாமல் இருக்க செய்யும் சேட்டைகள், அதனால் வில்லன் பெண் தன்னுடன் காதல், அதில் ஏற்படும் கலாட்டா, விடாப்பிடியா வீட்டின் உள்ளேயே சாக்கு போக்கு சொல்லி தங்கும் ஹீரோவின் சாமர்த்தியம், வில்லன், வில்லனின் மகன்கள் இவரை வெளியே செல்ல வைக்கும் செயல்கள் என அனைத்தும் செம காமெடி. ஒரு முழுநீல ஆக்‌ஷன் பட ஸ்கோப் இருந்தும் அதை அப்படியே உல்டா செய்து ஜெயித்த படம்.

அனைவரின் நடிப்பும் அவ்வளவு அருமை. குறிப்பாக அந்த வயதான வில்லன் தான் என்னை மிகவும் கவர்ந்தவர். என்னா ஒரு மாடுலேஷன், பாடி லேங்குவேஜ், சூப்பர் நடிப்பு.....இப்படம் ஆந்திர அரசின் (2010) சிறந்த பொழுதுபோக்கு படமாகவும், சிறந்த வில்லன் நடிப்பிற்கும், சிறந்த பாடகர், சிறப்பு நடுவர் விருது என நான்கு விருதுகளை அள்ளியது.

நீங்களும் நிச்சயம் ரசிப்பீர்கள். கண்டிப்பாக பாருங்கள்.

வியாழன், 6 டிசம்பர், 2012

Indian Rupee - Malayalam Moview Review

எனது பார்வையில் இந்தியன் ரூபீ - மலையாள படம்

நமது நாட்டில் கொடிக்கட்டி பறக்கும் ரியல் எஸ்டேட் தொழிலை பின்பிலமாக கொண்ட படம். 

கொஞ்சம் சிந்தித்து பாருங்கள், இதை கதைக்களமாக கொண்டு ஒரு முழுப்படத்தை எடுக்க முடியுமா? நினைத்து பார்த்தால், மலைப்பே மிஞ்சும். இதை வெற்றியாக்கியதில் தான் இயக்குனரின் சாமர்த்தியம், திறமையுள்ளது. வெறும் வெற்றியோடு நில்லாமல், அந்த ஆண்டிற்கான கேரள அரசின் சிறந்த நடிகரின் விருது பிரித்விராஜ்க்கும், பிராந்திய மொழிப் பிரிவில் தேசிய விருதும் பெற்றத்தந்த அருமையான படம்.


மிகவும் எதார்த்தமான நேர்த்தியான திரைக்கதை. ஸ்கூல் டிராப்-அவுடான பிரித்விராஜூம் அவர் நண்பரும் கோழிக்கோட்டில் ஒரு பெரும் ரியல் எஸ்டேட்டின் சப்-பிரோக்கராக இருப்பவர்கள். நாமும் வெகுவிரைவில் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் தொழிலதிபராக ஆவோம் என பெரும் கனவுகளுடன் இருக்கும் நம்மை போல ஒரு சராசரி இளைஞன். ஆனால் நிஜத்தில் சிங்கிள் டீக்கு லாட்டரி அடிக்கும் ஆள்.

ஒரு திணிக்கப்பட்ட காட்சி, டிவிஸ்டும் இல்லாத படம். தெளிந்த நீரோடையாக அதன் போக்கிலேயே பயனிக்கும் திரைக்கதை. சிறு பிரோக்கர்கள் சந்த்திக்கும் தொழில் போட்டி, அவ்வூரில் இருக்கும் பெரும் முதலையுடன் நடக்கும் உள்குத்துக்கள், அவர்களை மீறி ஏதும் செய்ய முடியா இயலாமை, அவர்களின் ஆதிக்கம் என நாம் நிஜத்தில் பார்க்கும் அத்தனை விஷயமும் அச்சுஅசலாக நம் கண்முன்னே விரிகிறது.  நிச்சயம், அட ஆமாம்ல என போட வைக்கும்.

திலகன், இவர்களிடத்தில் தன் சொத்தை விற்க அணுகும்போது படம் சூடுப்பிடிக்கிறது. தன்னுடைய நிலம், கடைசி நேர சட்டசிக்களால் விற்க முடியாமல் போனாலும், இவர்களுடன் ஏற்படும் நட்பால் பிரித்விராஜுடனே தங்குகிறார். மேலும் திலகன் தரும் டிப்ஸ்களால், இவர்கள் தொழிலில் அடையும் முன்னேற்றம் என அத்தனையும் சுவாரஸ்யம். 



வித்தியாசமான குணம் கொண்ட ஜெகதி ஷாப்பிங் மால் கட்டி விற்பவர். அவரிடம் ஷாப்பிங் மாலை தனக்கென (பவர்) வாங்கி, கைமாற்றி காசு பார்க்க துடிக்கும் துடிப்பும், அதற்கான தான் மற்றும் தன் கூட்டாளி,  திலகன் மேற்கொள்ளும் யுத்திகளும் தான் படம்.

நான் இந்த படம் பார்த்து ஏறக்குறைய 3-4 மாதங்களாகிவிட்டது. இன்னும் என்னில் அதன் தாக்கும் இருக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். குறிப்பாக இறுதியில் வரும் டிவிஸ்ட்கள் அருமையோ அருமை. அவ்வளவு இயல்பாக கதையில் பொருந்துகிறது. அது என்னவென்று சொன்னால் சுவாரஸ்யம் போய்விடுமாதலால் கூறவில்லை. நீங்களே கண்டு மகுழுங்கள்.

வர வர திலகன் மேல் தீரா காதல் வந்துவிடும் போல எனக்கு. என்னா ஒரு பிறவி நடிகன்யா...!!!! நாம் இவரை சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை. இவரைப்பற்றி சொல்லும்போதே ஒரு பூரிப்படைகிறேன். வர்ணிக்க வார்த்தையே இல்லை. சிவாஜியை அசால்ட்டா தூக்கி ஏப்பம் விட்டிருவார் மனுஷன்...!! ஒரு துளிக்கூட நடிக்கிறார் என்று நாம் உணரவே மாட்டோம், அப்படியான ஒரு திறமை. இவர் மறைந்தாலும், இவர் புகழ் என்றும் அழியப்போவதில்லை.


 கண்டிப்பாக பாருங்கள் என பரிந்துரைக்கிறேன். படத்தின் இறுதியில் நீங்களும், இதன் நிதர்சனத்தை உணர்வீர்கள். ஏன் இப்படி ஒரு கிளைமாக்ஸ் என்பதை மனதார ஒத்துக்கொள்வீர்கள்.

வியாழன், 29 நவம்பர், 2012

Road trip - ஹத்தா - ஃபுஜேரா - துபாய் (Part-4)


ரோட் ட்ரிப் - டிட் பிட்ஸ்
  
* சென்ற கடைசி பகுதியில் கட்டுரையின் நீளம் கருதி, முடிவு நெருங்கும்போது சுருக்கமாக எழுதினேன். என் நண்பர்களின் வேண்டுக்கோளுக்கு இணங்க, விடுபட்டுப்போன சில பகுதிகளை இங்கு விரிவாகவும், சில டிட்-பிட்ஸாகவும் தருகிறேன்.

·         * ஹத்தா பண்ணையில் இருந்து மீண்டும் ஓமன் எல்லையை கடந்து செல்லும் போது, வழியில் ஒருத்தனும் காணவில்லை. ஈத் பண்டிகை சமயத்திலும் ரோடெல்லாம் வெறிச்சோடி கிடந்தது. செல்லும் சாலையோ செம திரில்லிங்கோட ஒரு சீ-சா போல மேலும் கீழும் போவதுமா இருக்கு. வண்டியில் ஐந்து பேர் இருப்பதால் சில மேட்டில் இழுப்பதற்கு முனங்கியது. ஆதலால் ஒரு ரோட்டின் பிரிவில் எங்கு போவது என்றொரு சந்தேகம் வந்தது. அந்த பிரிவில் ஒரு வழியாக ஃபுஜேராவிற்கும், மற்றொன்றில் உம்-அல்-குயின்கு செல்லலாம். ஏனெனில் ஃபுஜேரா வழி நிறைய சாகசம் நிறைந்தது போல இருந்தது.
  
·         * ஒரு சிறிய தயக்கத்திற்கு பிறகு, வண்டியை ஃபுஜேராவிற்கு செலுத்தலாம் என தீர்மானித்து GPSல் கொடுத்தோம். இந்த தைரியம் எப்படியென்றால், வண்டி தள்ளத்தான் கைவசம் நாலு பேர் இருக்கோமே என்று தான்!!! 

·         * ஒரு உண்மை என்னான்னா எங்க அம்மணிக்கு மட்டும் இது தெரிஞ்சது, நாலு நாள் உப்புமா போட்டு கொன்னுடுவாங்க...அதுவும் சட்னி இல்லாமல்... ஆங்...!! 

·         * இந்த வழியாக இரவில் பயணிப்பதை தவிர்க்கவும். எதிர்பாரா விதமாக வண்டிக்கு ஏதேனும் நேர்ந்தால், நம்ம கதி அதோ கதி தான்...!!

·       * GPS வழிகாட்டுதலில் பயணம் செய்துக்கொண்டிருந்தபோது Wadi Al Helo Tunnel என்ற குகையை நோக்கி வண்டி போகிறது என்று அறிந்தவுடன் மிகுந்த ஆனந்தம் அடைந்தோம். நாங்கள் பயணித்த வழித்தடம், துபாயில் இருந்து நிறையபேர் செல்லும் வழியில் ஒன்றிணைந்தது. 

·        * அந்த குகையை கடந்தவுடன், அருமையான வளைவுகளை கொண்ட சாலையில் பயணித்து, கல்பா ஊரை எட்டியது. அங்கு போட்டிங் வசதி செய்து சுற்றுலா ஸ்தலமாக சமீபத்தில் மாற்றிருக்கிறார்கள். 

·         * இந்த இடத்திலிருந்து நடக்கும் தூரம் தான் மற்றொரு ஓமன் எல்லை. கல்பா என்ற நகரம், ஓமனின் வடக்கு எல்லையை ஒட்டி இருக்கும் ஊர். 

·       * கல்பா, ஃபுஜேரா, கொர்ஃபகான் என்ற ஊர்கள், Gulf of Oman என்ற அரபிக்கடலின் ஒரு பகுதியானது. இது அசலில், நம் பாண்டிசேரி போல ஒரு பக்கம் முழுவதும் கடல், மறுபக்கம் நகரம் கொண்ட ஊர்கள்.

·         * கொர்ஃபகான் என்ற இடம், சுற்றுலாவிற்கு மிகவும் பிரசிப்பெற்ற ஊர். துபாயில் இருக்கும் அத்தனைபேரும், விடுமுறையென்றால் படையெடுக்கும் ஸ்தலம். அதன் காரணமாகவே இந்த இடத்திற்கு போவதை தவிர்த்தோம். Water Sports எனப்படும் விளையாட்டுகள் செம கலைக்கட்டும். பேரா கிலைடிங், வாட்டர் ஸ்கூட்டர், பனானா ரைட் போன்ற நீர் விளையாட்டுகள் ஆட சிறந்த இடம்.

     * ஃபுஜேராவில் உள்ள பழமைவாய்ந்த கோட்டையை கண்டபின்பு, துபாய் செல்லாமல், மீண்டும் ரூட்டை மாற்றி உம்-அல்-குய்ன் போக முடிவாயிற்று. ஒரு ஈ, காக்கா கூட இல்லாத மிக அற்புதமான ஏனைய பேர் அறியாத ரோடு. அருமையோ அருமை.

ஞாயிறு, 4 நவம்பர், 2012

Road trip - ஹத்தா - ஃபுஜேரா - துபாய் (Part-3)

முந்தைய 2 பகுதிகளின் விவரங்களுக்கு....!!!

http://nondavan.blogspot.com/2012/10/road-trip.html
http://nondavan.blogspot.com/2012/11/road-trip-part-2.html

சென்ற பகுதியில் கூறியதுபோல், அந்த செங்குத்தான பள்ளத்தை கடந்தவுடனே, ஒரு ஒத்தையடி பாதையில் வண்டியை செலுத்தினான். நான் பதறிப்போய் நாம் வந்தது இந்த வழித்தடம் அல்ல, வண்டியை நிறுத்து சார்லஸ் என்று கதறும்போதே ஒரு பண்ணை தென்பட்டது.

சார்லஸ் நேரே பண்ணையின் பூட்டிய வாசலின் முன்பு வண்டியை நிறுத்திவிட்டு,  வா ஹரி நாத்தூர்கிட்ட போய் அனுமதி கேட்டு பார்க்கலாம் என்று மலையாலத்தில் பரைத்தான். :) (நாத்தூர் என்றால் நம் ஊரில் இருக்கும் காவலாளி அல்லது அனைத்தையும் பார்த்துக்கொள்ளும் ஒரு ஆள் என்பது பொருள்). ஒரு பாகிஸ்தானியர் நாத்தூராக இருந்தார். அவன் வருவதை கண்டவுடன், சார்லஸ் நான் ஏதோ ஹிந்தியில் பி.எச்டி. படித்தது போல நீயே பேசு ஹரி என்று என்னை கைக்காட்டினான். நம்ம ஹிந்திப்புலமை அபாரமானது... ’ஏக் மார் தோ துக்கடா’ என்ற ஒரு வாக்கியம் தான் முழுசா தெரியும், ஹிந்தியில்... :) :) :)

அந்த பாகிஸ்தானி நிறைய நேரம் என்னிடம் பேசினான்... நான் அவன் வாயை மட்டும் பார்த்துகிட்டே நின்னேன், சத்தியமா ஒன்னும் விளங்கலை....அரபி வர நேரமாச்சுன்னு மட்டும் பொத்தம்பொதுவா அர்த்தம் பண்ணிட்டேன். இப்போ நம்ம அவன்கிட்ட பேசனும். நான் ஹிந்தியை பிச்சு, கறியாக்கி, நூடுல்ஸ் செய்து ஹம் தேஷக்தே?? பீஸ் மினிட் பஸ் மேரே பாய்.. மேரா பேமாலி ஆயாதா...(அதாங்க ஃபேமிலி) சோட்டோ பச்சோக்கோ தேஷ்க்தேக்கேலியா, பகுத் அச்சான்னு....வாய்ல வந்தது எல்லாம் ஹிந்தின்னு பேசினேன்... நடுநடுவுல அவனும் பேசினான், நமக்கு புரியனுமே??. அவன் நம்ம ஹிந்தி பேசும் புலமையைக்கண்டு, மிரண்டுப்போய் ஓகேன்னு சொல்லிட்டான், சீக்கிரம் பார்த்துட்டு வந்திருங்க என்று சொன்னான்னு நினைக்கிறேன்.

எந்த எதிர்பார்ப்புமின்றி உள்ளே சென்றால் வாழ்வின் மிக உன்னதமான தருணத்தை உணர்ந்தேன். நாம் அதன் அழகில் அப்படியே லயத்துப்போனோம். நான் ஏதோ வேறோரு பூமியில் இருப்பது போன்று ஒரு கனநேர உணர்வு.
பண்ணையின் உள்ளே (அடர்ந்த மாங்காய் மரங்கள்)
நான் சிறுவயதில், கொங்கு நாட்டு வயக்காட்டில் சுற்றித்திரிந்தது அப்படியே மீண்டும் கால சுழர்ச்சியாக கண்முன்னே  வந்ததாக உணர்ந்தேன். எங்கு பார்த்தாலும் மாங்காய் மரங்கள், கருவேப்பிலை மரங்கள், ஈச்ச மரங்கள், அடர்ந்த புள்வெளிகள், நம்ம ஊரில் இருப்பது போல் சிறிய நீர் பாசன பாத்திக்கட்டு (வாய்க்கால்) என எல்லோருக்கும் இன்பதிர்ச்சியை கொடுத்தது. நம்ம வீட்டு அம்மணி, சளைச்சவங்களா என்ன? அங்கு இருக்கும் கருவேப்பிலை மரத்தில், ஒரு வாரத்திற்கான இலையை பறிச்சுட்டாங்க.... :) :)

வயல்வெளி
மாங்காய் மரத்தின் கீழ், என் மகன் யோகவ்
நீர் பாசன வாய்க்கால் (பாத்திக்கட்டு)
ஈச்ச மரங்கள் நிறைந்த தோட்டம்
யார் சொன்னது துபாய்ல புல்லு, பூண்டு கூட முளைக்காத பாலைவனம் என்று. முறையாக பராமரித்தால், எல்லாம் சாத்தியமே என்பதற்கோர் சிறந்த  உதாரணம், இந்த காட்சிகள். அதுவும் வெறும் மொட்டை மலைகளால் சூழ்ந்த ஒரு இடத்தில். அந்த நாத்தூர் மீண்டும் அங்கே வந்து, 30 நிமிடம் ஆகிவிட்டதாகவும், அரபி சற்று நேரத்தில் வருவதாக கூறினான். சரியென்று வெளியே வர மனமில்லாமால் நடையை கட்டினோம்.

வண்டியில் இதைப்பற்றியே சிலாகித்துக் கொண்டு வந்தோம். இதை நீங்களும் காணும்போது நிச்சயம் நான் அடைந்த பரவசம் நீங்களும் உணர்வீர்கள் என்பதில் எனக்கு சிறியளவு ஐயமும் இல்லை. அடுத்து, ஓமன் நாட்டின் எல்லையை கடந்து ஃபுஜேரா செல்ல தீர்மானித்தோம்.

இன்னொரு விஷயம் சொல்ல மறந்து விட்டேன். நம்ம ஊரைப்போல், வழி கேட்டு கேட்டு செல்லலாம் என்பது இங்கு முற்றிலும் இயலாத காரியம், அதுவும் இதுபோன்று பலரும் அறியப்படாத வழியென்றால் கிழிந்தது பொழப்பு... ஆகையால், கையில் GPS சிஸ்டம் கொண்ட மொபைலே தெய்வம். நாம் போகும் இடத்தை கொடுத்துவிட்டால் போதும், அதுவே நம்மளை முழுவதும் வழிநடத்தும்.

இன்று எங்கள் வாழ்வின் ஜாக்பாட் என்று தான் சொல்ல வேண்டும். நான் இதற்கு முன்னமே ஃபுஜேரா சென்றிருந்தாலும், இப்படி ஒரு வழித்தடம் கண்டதே இல்லை!!! , நாளா பக்கமும்  உயர்ந்த மலைகள், கண்ணுக்கு எட்டின தூரம் வரை ஆள் நடமாட்டமே இல்லை, ஆள் எதற்கு... ஒரு வண்டி கூட தென்படுவது இல்லை. அதன் நடுவே த்ரில் பயணம்.
செங்குத்தான த்ரில் நிறைந்த வழித்தடம்
நான், என் மகன் யோகவ் முன்னிருக்கையில் அமர்ந்துக்கொண்டோம். இங்கு பொதுவாக ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் முன்சீட்டில்  அமரக்கூடாது. மீறினால் அபராதம் நிச்சயம். ஆனால், நாம் தான் இந்தியர்களாச்சே... போலிஸ் இல்லையென்றால் ரூல்ஸை மீறுவோமே...!!! ஒரு தைரியத்தில் என் மகனை அமர சம்மதித்தேன். எனக்கும் அந்த த்ரில் ரைடில் ஒரு துணையாச்சு. அதுவும் வழியெல்லாம் சாகசம் செய்யும்படியாக சாலை எப்படியென்றால், வண்டி செல்லும்போது ஒரு குறிப்பிட்ட இடம்வரை தான், சாலை தெரிகிறது. அதற்கு அப்புறம் என்னவென்று தென்படவே இல்லை. எவ்வளவு முயன்றும், எவ்வளவு கிட்ட சென்றாலும், அத்தனை வேகத்திலும். மிக அருகில் சென்றால் பெரும் பள்ளம் போல் கீழே செல்லும் சாலைகள், நாம் ஜெயண்ட் வீலில் பயணம் செய்வது போல், திடீரென்று கீழ் நோக்கி செல்கிறது. செம்ம அனுபவம்....!!

ஜெயிண்ட் வீல் போல கீழ் நோக்கி செல்லும் ஒரு பகுதி
இப்படியாக பலப்பல சாகசம் நிறைய செய்துக்கொண்டு ’Wadi Al Helo Tunnel’ என்ற இடத்தை அடைந்தோம். இரண்டு பெரிய மலைகளை குடைந்து 1.6 கி.மீ நீளம் கொண்ட இந்த குகை, 2003ஆம் ஆண்டு மாற்று போக்குவரத்தாக சார்ஜா அரசால் கட்டப்பட்டது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் மிக நீலமான குகை (Tunnel) என்பது இதன் சிறப்பு. இந்த ரோட்டின் பெரும்பகுதி, சார்ஜாவிற்கு சொந்தமான பிராந்தியம் அது. நேரில் மிக பிரம்மிப்பாக இருக்கும்

பின்னால் இருக்கும் யுஅரிய மலையை கடந்து செல்ல குகை
வாதி ஹலோ டன்னல்

குகையின் உட்பகுதி
இந்த குகையை கடந்து சென்றால், நாம் ஊட்டி செல்வது போல கீழ்நோக்கி செல்லும்.மலைப்பாதை இருக்கும். கீழே ஒரு அழகிய கடற்கரை சார்ந்த சிறிய நகரம், கல்பா. நம் காரைக்கால் போல இந்த கல்பா ஊர் எங்கோ இருக்கும், சார்ஜா எங்கோ இருக்கும் , இதே போல் திப்பா என்ற ஊரும் சார்ஜாவிற்கு சொந்தமானது. ஆனால், இது இருப்பது வேறு இடத்தில். இதைப்பற்றி பின்னர் கூறுகிறேன். உங்களுக்கு எளிதில் விளங்க - உதாரணத்திற்கு, எப்படி காரைக்கால், மாகே என்ற ஊர்கள் எங்கோ இருந்தாலும், அது பாண்டிச்சேரிக்கு சொந்தம் என்கிறோம், அதே போலத்தான் கல்பாவும், திப்பா என்ற ஊரும்.

புதிய படகு சவாரி - கல்பா

கல்பா பீச்

கல்பா பீச்
கல்பா பீச்சும் நம் பாண்டிச்சேரி பீச்சை போல ரம்மியமாக இருக்கும் சமையத்தில், அதே போல் கருங்கற்களை வைத்து நிறப்பி உள்ளார்கள். இங்கு சற்று விளையாடிவிட்டு, பயணத்தை ஃபுஜேராவின் கோட்டைக்கு தொடர்ந்தோம்.

ஃபுஜேரா என்ற ஊர், 1952ஆம் ஆண்டுவரை சார்ஜாவின் கட்டுப்பாட்டில் இருந்தது. பின்னர் தனி எமிரேட்டாக உருவானது. இங்கு காணும் வீடுகள் எல்லாம், நம் இந்தியா போல் தோற்றமளிக்கும். மிகச்சாதாரண கட்டிடங்களோடு. பெரும்பாலும், தரைத்தளம் மட்டுமே.

ஃபுஜேரா கோட்டை -  இந்த நாட்டின் மிகப்பழமையான கட்டிடம் என அறியப்படுகிறது, தோராயமாக 1670ஆம் ஆண்டு இருக்கும். ‘கத்தாமா’ என்ற மலையாள படத்தில் காவ்யா மாதவன் ஜெயிலில் இருந்து வெளிவரும் காட்சி, இங்கு படமாக்கப்பட்டுள்ளது.

கோட்டையின் நுழைவாயிலில் யோகவ்
ஃபுஜேரா கோட்டை
மணி மாலை ஐந்தை தொட்டது. எங்கூட்டு அம்மணி, கோவத்தில் பொருமிக்கொண்டிருந்தாள். அதற்கு காரணம் நான் ஒன்றும் சாப்பிட வாங்கிக்கொடுக்கவில்லை. மாசக்கடைசியாதலால், டப்பு லேது. கிரெடிட் கார்ட் உள்ள கடை கண்ணுக்கு அகப்படவில்லை. விதி மீண்டும் கொடுயது பாஸ். கோவத்தின் உஸ்ணம் காரணமாக ஒரு சிறியக்கடையில் வண்டியை நிறுத்தி, ஜூஸ், சிப்ஸ், ஏழைகளின் சாண்ட்விட்ச் பரோட்டோ, ஒரு டீ வாங்கிக்கொடுத்து உஸ்ணத்தை சற்று தணித்தேன்.

பின்பு எங்கள் பயணத்தை உம்-அல்-குயின் என்ற எமிரேட்டிற்கு தொடர்ந்தோம். ஆனால் இருட்டாகிவிட்டதால், பெரிதாக இன்றும் காணமுடியவில்லை. ஒரு அருமையான பீச் இருந்தது. சிறிது நேரம் காற்று வாங்கிகொண்டே மிச்சமீதி நொறுக்குகளை அங்கு முடித்திவிட்டு வண்டியை கிளப்பினோம்.

இரவாகிவிட்டதால், ஒரு கிரெடிட் காட் இருக்கும் கடைக்கு சென்று செம கட்டுக்கட்டிவிட்டு அம்மணியின் கோபப்பார்வையில் தப்பித்து அஜ்மான், சார்ஜா வழியாக துபாய் அடைந்தோம்.

கட்டுரையின் நீளம் கருதி, இறுதியில் இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.:)

எங்கள் வாழ்க்கையில் மறக்க முடியா அனுபவத்தை கொடுத்த என் நண்பர் சார்லஸ்க்கு ஸ்பெசல் நன்றிகள்.

வியாழன், 1 நவம்பர், 2012

Road trip - ஹத்தா - ஃபுஜேரா - துபாய் (Part-2)

பகுதி-1 பற்றிய விவரங்களுக்கு
http://nondavan.blogspot.com/2012/10/road-trip.html

சென்ற பகுதியில் கூறியது போல், ஓமன் நாட்டின் எல்லையைக் கடக்க நம் போட்டோ ஒட்டிய அடையாள கார்டை காண்பிக்க வேண்டும். எமிரேட்ஸ் ஐடி கார்ட் அல்லது பாஸ்போர்ட் விசா பேஜுடன். (எமிரேட்ஸ் ஐடி கார்ட் என்பது இந்த ஊரில் வசிக்கும் நபர்களுக்கு தரப்படும் ஐடி கார்ட்)

இங்குதான் ஒரு சிறிய சிக்கல் காத்திருந்தது. எங்கூட்டு அம்மணி, என் பையனின் ஐடி கார்டை தொலைத்துவிட்டாள். கிளம்பும் அவசரத்தில் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. பிறகு வேறென்ன, சண்டை தான் :) :)

சரியென்று ஒரு முடிவோடுதான் எல்லையை கடக்க சென்றோம். ஒரு வேளை நாம் பிடிபட்டால், போலீஸ் எங்களை எல்லையை கடக்க அனுமதிக்க மாட்டார்கள். நம் வாகனத்தை திருப்பி துபாய்க்கே போகச் சொல்வார்கள். பக்பக்கென்று ஹார்ட் பீட் வேகமாக அடிமனதில் அடித்தது. வெளியே காட்டிக்காமல் என் ஐடி கார்ட், என் நண்பர் சார்லஸின் ஐடி கார்ட் காண்பித்தபின் அந்த போலீஸ் போகச்சொல்லிட்டான். காரணம், நாங்க பெரிய பிஸ்தாக்கள் என்று நினைக்க வேண்டாம் :).

போலீஸ்காரர் பின்சீட்டில் பெண்கள், குழந்தை இருப்பதை கண்டு, ஃபேமிலி என்றவுடன் ஓகே செல்லுங்கள் என்று கூறிவிட்டார். இங்கே நான் சொல்ல விரும்புவது, இந்த நாட்டில் பெண்களுக்கு தான் முதல் மரியாதை. பெண்களை அவ்வளவு மதிப்பார்கள். குடும்பமாக சென்றால் எல்லா இடத்திலும் கூடுதல் மரியாதை நிச்சயம் கிடைக்கும், இதை கண்கூடாக நீங்க உணர முடியும். நான் கூறுவதற்கு இதுவே ஒரு நேரடி சாட்சி.

எல்லையை கடந்தவுடன், மனதில் ஒரு நிஷாந்தம் உருவானது. பின்பு ஒரு பெட்ரோல் பங்கில் வண்டியை நிறுத்திவிட்டு, நொறுக்குத்தீனி, தண்ணி பாட்டில்கள், காபி என்று உண்டு ரிலேக்ஸ் செய்துக் கொண்டோம். வண்டிக்கு பெட்ரோல் ஃபுல் டேங்க் அடித்துக்கொண்டோம். சென்ற பகுதியில் கூறினேன் அல்லவா... பெட்ரோல் சிறிதளவு தான் போட்டுக்கொண்டு கிளம்பினோம் என்று, யூகித்தீர்களா??? ஆம், துபாயை விட, ஓமனில் பெட்ரோல் விலை இன்னும் குறைவு. துபாயில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 24ரூபாய், அதுவே ஓமனில் 15ரூபாய், நம் இந்திய ரூபாயின் ஒப்பீட்டின் மதிப்பில்.

சிறிது நேரத்தில் ஹத்தா டவுனை அடைந்தோம்.
ஹத்தா டவுன்
இது துபாயை விட முற்றிலும் மாறுபட்ட அனுபவத்தை கொடுக்கும் ஊர். துபாயில் எங்கு பார்த்தாலும் உயர்ந்து நிற்கும் வானளாவிய கட்டிடங்கள் நிறைந்தது. ஆனால் இங்கு எல்லா வீடுகளும், அலுவலகக் கட்டிடங்களும் தரைதளம் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. இல்லையெனில் முதல் மாடி கொண்ட மிகச்சிறியளவிளான கட்டிடங்கள். அதுவும் அரபிகளின் கட்டிட கலைகளை சார்ந்தவைகள் இதன் சிறப்பு. ஹத்தாவை ஏன் ’நாட்டின் பாரம்பரிய டவுன்’ என்று அழைக்கிறோம் எனக் காணும்போது தான் புரிகிறது. நான் சொல்வதைவிட, நீங்களே படத்தை காணுங்கள்.
அரபி கட்டிட கலையில் இருக்கும் கட்டிடங்கள்
குடியிருப்பு வீடுகள்
குடியிருப்பு வீடுகள்
 இப்பொழுது எங்கள் பயணம், ஹத்தா டேமை நோக்கி நகர்ந்தது. போகும் வழியில் ஹத்தாவின் மிகப்பழமையான ராணுவ கோட்டை (Military Fort) மற்றும் ஜும்மா மசூதி கட்டிடத்தைக் காண நேர்ந்தது. இது 1780ஆம் ஆண்டு கட்டப்பட்டதாக அறிகிறேன். இதற்கு கீழே ஒரு பெரிய விளையாட்டு மைதானம் தற்போது அமைத்துள்ளார்கள், சுற்றுலா வரும் நபர்களை கவர. என் மகன் அதைக்கண்டால் ஒரு மணி நேரத்தை விழுங்கி விடுவான். ஆதலால், நேரம் இல்லாத காரணத்தால் ஒரு புகைப்படும் மட்டும் எடுத்துக்கொண்டு வண்டியை டேம் (Dam) அமைந்திருக்கும் மலையில் ஏற்றினோம்.

Military Fort (Oldest Building in Hatta)


மிக அருமையான வழித்தடம். இதில் பயனித்தபோது, எனக்கு கோவை மருதமலை உச்சிக்கு செல்ல அடிவாரத்தில் இருந்து மேலிருக்கும் கோயிலுக்கு போக ஒரு சிறப்பு வழித்தடம் இருக்கும். அதில் பயணித்த நினைவலைகள் வந்தது. முதலில் வளைந்து வளைந்து செல்லும் பாதை, இறுதியில் செங்குத்தாக ஏறும். எங்கள் வண்டி, இறுதியில் செங்குத்தான பகுதியில் ஓவர்லோட் காரணமாக இழுக்கவில்லை.  எல்லோரும் இறங்கி படிக்கட்டில் நடக்க ஆரம்பித்தோம். சார்லஸ் & யோகவ் மட்டும் காரில் மேலே சென்றார்கள்.
டேம் மேல செல்லும் படிக்கட்டு பாதை
மூச்ச்சிரைத்து நிற்கும் என் தங்கைகள்

மேலே போய், அங்க போலாம் என்று சும்மா பீலாவிடும் நான்




 இந்நேரம் உங்க மனதில் ஒரு கேள்வி உதயமாகிருக்கும் என நினைக்கிறேன். வறண்ட பாலைவனத்தில் இருக்கும் ஊருக்கு எதற்கு நீர்தேக்கும் டேம் என்று... ???? ஏற்கனவே சொன்னதுபோல் ஹத்தா என்ற டவுன், மலைகளை சுற்றியுள்ள பகுதி. நீங்கள் அறியாத உண்மையொன்று உண்டு. அது துபாயில், குளிர்காலத்தில் வருடத்திற்கு இரண்டு நாள் நிச்சயம் மழை பெய்யும்.

இங்கு ஒரு வேளை அடைமழை வந்தால், பெய்யும் மழைக்கு ஒரு வடிகால் தேவையல்லவா??? சுற்றியிருப்பவைகள் எல்லாம் மொட்டை மலைகள், நீர் தேங்க வாய்ப்பேயில்லை. ஊரில் வெள்ளம் வராமல் மக்களைக் காக்க வேண்டும், மேலும் மவராசன் ஷேக்கிடம் பணம் இருக்கு. அப்புறம் என்ன, 1989ஆம் ஆண்டு கட்டிட்டாங்க டேம்.

ஹத்தா டேம் (Hatta Dam)



Another View
மேலே உள்ள புகைப்படத்தை பார்க்கும் போது, இது எங்கோ ஒரு திரைப்படத்தில் கண்டதைப் போல் உணர்கிறீர்களா? நானும் பலப் படத்தில் இந்த இடத்தை காணும்போது,  இது துபாய் என அறிவேன், ஆனால் எங்கு என்று தெரியாமல் பல நாட்கள் மண்டை குழம்பி இருந்துள்ளேன்.

நீங்கள் கணித்தது சரிதான். ‘நான் அவன் இல்லை’ படத்தில் சினேகா நடித்த ’ஏன் எனக்கு மயக்கம்’ என்ற பாடல் காட்சி நியாபகம் வருதா??? அதே, அதே..... இந்த டேமில் நிறைய சினிமா பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. அதில் அதுவும் ஒன்று.

சினேகா பாடிய பாட்டு நியாபகம் வருதா????
அந்த பாட்டின் வீடியோ லிங்க் இதோ.
http://www.youtube.com/watch?v=HCFjKWH-2p8

மேலும், இந்த இடத்தில் எடுத்த சில சினிமா பாடல் காட்சிகள் உங்க பார்வைக்காக தருகிறேன்.

ஏன் எனக்கு மயக்கம் பாடல் - நான் அவன் இல்லை -1 (தமிழ்)
பாக உன்னாரா பாடல் - நான் அவன் இல்லை -2 (தமிழ்)
சதுஅ, ஏமிடோ - அதிதி (தெலுங்கு)
முதல்முறை பார்த்தேன் - பிரியசகி (தமிழ்)
மொகவாடா மாதி போயேரா - அல்லாரி புல்லூடு ி (தெலுங்கு)
அப்போ வீடூ எந்த்தோ - ஒக்கடுன்னாடு ி (தெலுங்கு)
யாமினி - ஆறுமுகம் (தமிழ்)
மனசில் மனசில் - நம் நாடு (தமிழ்)
கர் தூன் கமால் - முஜ்ஷே ஷாதி கரோகி ் (ஹிந்தி)
யே கௌன் ஆயா மேரே தில் மைன் - சௌடா - தி டீல் ் (ஹிந்தி)
ஜப் கபி - 36 சைனா டவுன் (ஹிந்தி)

இந்த டேமில் வருடம் முழுவதும் நீர் தேங்கி இருப்பது,ஆச்சர்யமே...!!! நாம் டேமின் அடியில் சென்று நீரில் விளையாடலாம். நீர், நம் முழங்கால் அளவு தான் இருக்கும். ஆகையால் ஆபத்தேதும் இல்லை. மிக மிக அற்புதமான இடம். சந்தர்ப்பம் இருப்பின், சென்று வாருங்கள், தவற விடக்கூடாத ஒரு இடம். துபாயில் வசிக்கும் பலப்பேருக்கு இந்த இடம் இன்னும் தெரியாது என நினைக்கிறேன்.

நாங்கள் திரும்பும் வேளையில் நல்ல கூட்டம் கூடிவிட்டது. மிகவும் சிரமப்பட்டு வண்டியை திருப்பி இறக்கினான், சார்லஸ். அடுத்து கீழே இறங்கும்போது, என் நண்பன் இங்கு அரபிகளின் ஏராளமான பண்ணை வீடுகள் இருக்கு. யாருடனேனும் உள்ளே செல்ல கேட்டு பார்க்கலாம் என்று கூறினான். சம்மதித்தால் உள்ளே ஒரு ரவுண்ட் சென்று வரலாம் என முடிவு செய்து ஒரு ஃபார்ம் ஹவுஸ்க்கு சென்றோம்.

இன்னும் ஒரு பகுதி மட்டும் தான் இருக்கு... உங்களை போட்டு தாளிக்க மாட்டேன் :) :)






செவ்வாய், 30 அக்டோபர், 2012

Road trip - ஹத்தா - ஃபுஜேரா - துபாய்

பக்ரீத் பண்டிகையை முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்றால் ஒரு இஸ்லாமிய நாட்டில் நீங்கள் இருக்க வேண்டும். அதுவும் துபாய் போன்ற ஒரு இஸ்லாமிய நாட்டில் நீங்கள் இருந்தால் சொல்லவே தேவையில்லை. துபாய், பக்ரீத் என்றால் திருவிழாக் கோலம் பூண்டுவிடும். நிறைய மால்களில், கடைகளில் உண்மையான தள்ளுபடி விற்பனை, சிறப்புப் பேருந்துகள், 23 மணி நேர மெட்ரோ ரயில்கள், துபாய் பீச் பார்க்களில் எல்லாம் பெரும் திரளான கூட்டம், அலைமோதும் டூரிஸ்ட் கூட்டம், ஊரு பூரா காணுமிடமெல்லாம் மின் விளக்குகளால் அலங்கரித்து நம்மை ஒரு கொண்டாட்ட மனநிலைக்கு உட்படுத்திவிடுவார்கள்.

ஈத் விடுமுறை வருகிறது என்றாலே, நீ எங்க போற, நான் இங்கு போகப்போகிறேன் என்றுதான் எல்லோரிடமும் ஒரே பேச்சா இருக்கும். நாமும் கண்டிப்பா எங்காவது நிச்சயம் போவோம், அல்லது போகத் தூண்டப்படுவோம். போதாகுறைக்கு 4, 5 நாள் எல்லா அலுவலகத்திற்கும் விடுமுறை வேறு. விதி வலியது பாஸ்……….

இது போதாதா....!! எளிமையா விளங்க சொல்லனும் என்றால் நம்ம ஊர் தீபாவளி போல, இவங்களுக்கு ஈத் திருநாள் (பக்ரீத்). நீங்கள் பிரியப்பட்டால், இந்தத் திருவிழாவைப் பற்றித் பற்றி தனியாக ஒரு கட்டுரை எழுதுகிறேன்.

நான் ஒரு நாள் பயணமாக, காரில் ஒரு லாங்-டிரைவ் போகலாம் என்று முடிவெடுத்து, சனிக்கிழமைக்குத் தேதியும் குறித்தாயிற்று. எங்கு செல்வது என்று திட்டமேதும் வகுக்கவில்லை. ஆனால் எல்லோரும் போகும் அதே வழியில் போகாமல், புதிய அறியப்படாத ரோட்டில் போகலாம் என்ற எண்ணம் உதித்தது. மேலோட்டமாக, ஹத்தா வழியாகச் சென்று ஃபுஜேரா அடைந்து, வீடு திரும்பலாம் என்பது தான் அடிப்படைத் திட்டம். நான், மகன் யோகவ், மனைவி, இரு தங்கைகள் மற்றும் என் அலுவலக நண்பன் சார்ல்ஸ். இவர்தான் காரோட்டுனர், ஏன்னா என்கிட்டதான் லைசன்ஸே இல்லியே...

ஹத்தா (Hatta)...

ஹத்தா என்பது துபாயிலிருந்து சுமார் 100கி.மி. தொலைவில் அமைந்துள்ள துபாயின் சிறிய டவுன். நம் நாட்டின் ஒப்பீட்டில் ஒரு சிறிய கிராமம் அளவில் இருக்கும் டவுன் (town), அவ்வளவே. வீட்டில் இருந்து காலை 11 மணிக்கு புறப்படும்போது, சிறிய அளவில் மட்டும் பெட்ரோல் அடித்துக்கொண்டு கிளம்பினோம். இத்தனை தொலைவு செல்லும்போது கார் பெட்ரோல் டேங்க் முழுதும் நிரப்பிக் கொண்டு செல்வதுதானே உத்தமம் என்று நீங்க சொல்வது கேட்கிறது. இதற்கான விடை நீங்களே பின்பு அறிவீர்கள். அதுவரை உங்கள் யூகத்திற்கு விடுகிறேன்.

இந்த சிறிய டவுனுக்கா இத்தனை தூரம் போக வேண்டும் என நினைத்தீர்களா? ஹத்தா சிறப்பு என்னவென்றால், இது பலப்பல சின்னஞ்சிறு ’ஹஜ்ஜார்’ எனும் மலைகளால் சூழ்ந்த ஒரு ரம்மியமான பகுதி. மேலும் துபாய் இருக்கும் கடல் மட்டத்தைவிட, மேல இருப்பதால் சீதோஷ்ன நிலையும் நன்றாக இருக்கும். மொட்டை மலைகளாக இருந்தாலும் நல்ல காற்று வீசும் ஊர்.
 

ஹஜ்ஜார் எனும் சிசின்னஞ்சிறுமலைகள்
  ஹத்தா போகும் வழியில்தான் ’டசர்ட் சஃபாரி’ என்று சொல்லப்படும் பாலைவனத்தில் காரை ஓட்டி சாகசம் செய்யும் இடம் இருக்கு. நிறைய டூரிஸ்ட் கம்பனிக் கார்கள் சுற்றி திரிவதை காணலாம். இதற்கென தனிக்கட்டணம், முன்பதிவு ஆகியவை தேவை.



Desert Safari Ride
மேலும் போகும் வழி நெடுகிலும் நூற்றுக்கணக்கான ஒட்டகங்கள் சுற்றித் திரிவதையும் காணலாம். நமக்கு அதிர்ஷ்டம் இருக்கும் பட்சத்தில் ஒட்டகங்கள் ரோட்டின் ஓரமாக நடந்து வரும். நாம் வாகனத்தை நிறுத்திவிட்டு அதை தொடலாம், போட்டோ எடுக்கலாம், உணவளிக்கலாம். எனக்கும் அதிர்ஷம் அடித்தது என்றால் பார்த்துக்கோங்க.

ஹத்தா போகும் வழியில் - பாலைவனம்
ரோட்டோரமாக வந்த ஒட்டகங்கள்


ஒட்டகத்தை பார்த்து ரசிக்கும் யோகவ்
என் மகன் ஒட்டகத்தை, அது வரை புத்தகத்தில் மட்டுமே பார்த்துள்ளான். அதை நேரில் கண்டதும், ஏக குஷியாகிட்டான். என் தோலின் மீது அமர்ந்து, ஒட்டகத்தை தொட்டு தொட்டு பார்த்தான். அவன் மகிழ்ச்சி முகத்தில் பொங்கி வழிந்தது. என்னாதா இருந்தாலும், தொடுணர்சியின் சுகமே தனி தானே....!!

பின்பு பயனத்தை ஹத்தாவிற்கு தொடர்ந்தோம். வழி நெடுகிலும் என் மகன் யோகவ், அப்பா ஒட்டகம், இப்படி சாப்பிடுகிறது, நான் அதை தொட்டேனே என்று ஒரே கலாட்டா, நம் காதுகள் செவுடாகும் வரை. :) :) :) ஹத்தா ஊரை நெருங்குவதற்கு 15கி.மி. முன், போலீஸ் இடைமறிந்த்தார்கள். பயம் வேண்டாம். அது ஓமன் நாட்டின் எல்லை. ஹத்தா ஊரை சென்றடைய ஓமன் நாட்டின் எல்லையைக் கடக்க வேண்டும். ஒரே குழப்பமாக இருக்கிறதா, இது துபாயின் டவுன் என்று சொன்னேன் என்று?

இந்த ஊரின் புவியியல் அமைப்பு அப்படி. ரோடு வழியாகச் சொல்லும் போது, ஒரு சிறிய பகுதி ஓமன் நாட்டிற்கு சொந்தமானது. ஆகையால் நம் எமிரேட்ஸ் ஐடி கார்டை காட்டிவிட்டு, பயனத்தை தொடரலாம். உங்களுக்கு எளிதில் புரியவேண்டும் என்பதற்காக மேப் படத்தை தருகிறேன், காணுங்கள்.


 பத்தி அதிகமாக வருவதால், பகுதி பகுடியாக தொடர்கிறேன், உங்கள் விருப்பம், ஆதரவு இருக்கும் பட்சத்தில்.

திங்கள், 29 அக்டோபர், 2012

Ustad Hotel – Malayalam Movie

உஸ்தாட் ஹோட்டல் – Ustad Hotel – Malayalam Movie

இப்படி ஒரு படம் பார்த்து வெகு நாளாச்சு. என்னடா இவன் எப்போ பார்த்தாலும் மலையாளப்படம் பற்றி சொல்றானே என்று நீங்க நினைப்பது புரியுது. தமிழ், இங்கிலீஷ் படம் என்று பிரிச்சுமேய கேபிள் சங்கரும், ஹ
ாலிவுட் பாலாவும் இருக்காங்க. நாம அவிங்க கிட்டக்ககூட நிக்க முடியாது, மூஞ்சி முகரை எல்லாம் பிஞ்சிடும். :):):)


 
நான் இங்கு சொல்வது எல்லாம் என்னை போட்டு புரட்டிய மிக அற்புதமான படங்கள் மட்டுமே.... சரி விசயத்திற்கு போவோம்.

மிக சிம்பிளான கதை. ஹோட்டல் பிஸினசையும் மனித நேயத்தையும் முடிச்சு போடும் ஒரு கதைகளன், அவ்வளவே. ’இங்கு சாப்பிட வருபவர்களின் வயிறு நிறைந்தால் மட்டும் போதாது, சமைக்கும் நம் மனதும் நிறையனும்’. எதற்காக சமைக்கிறோம் என்று உணரனும். இதை வைத்துகொண்டு ஒரு முழுப்படம் ஓட்ட முடியுமா என்றால் ஒரு காவியமே செய்ய முடியும் என்று நெத்தியில் அடிச்சு சொல்லிருக்கும் படம்.

உஸ்தாட் ஹோட்டலை கரீம் என்ற வயதான முதியவர் (திலகன்) நடத்திவருகிறார். இவரின் பேரன் ஃபைசல் (துல்கர்) இன்றைய நவீன காலத்து இளைஞனின் லட்சியங்களோடு எதிர்பாரா விதமாக இங்கு வந்து சிறிது காலம் தஞ்சம் புகுகிறார். உஸ்தாட் ஹோட்டல் பிரியாணி அந்த ஏரியாவில் மிகப்பிரபலமாக இருந்தும், ஹோட்டல் கடன் சுமையில் தத்தளிக்கிறது. அதற்கு காரணம் தன் தாத்தா காசுக்கு அலையாமல், வருபவர்களின் மனசே பெரிதென்று இருப்பவர்.

நிறைய குட்டி குட்டி கதைகள். ஃபைசல் பிறக்கும் கதை, ஃபைசலுக்கும், நித்யா மேனனுக்கும் நடக்கும் பெண் பார்க்கும் படலம், பின்னாளில் ஏற்படும் மெல்லிய நட்பு கலந்த காதல், நித்யா மேனன் ஒரு முஸ்லீம் பெண், வீட்டிற்கு தெரியாமல் அடிக்கும் லூட்டி, அவள் அனுபவிக்கும் சுதந்திரம், பேரனுக்கும் தாத்தாவிற்கும் இருக்கும் முரண் மற்றும் அன்பு, ஃபைசலுக்கும் தந்தைக்கும் இருக்கும் லட்சிய மோதல், இறுதியில் நம்ம ‘பசங்க’ பட வாத்தியார் ஜெயப்பிரகாஷின் குட்டி நெகிழ்ச்சியூட்டும் கிளைக்மாக்ஸ், ஃபைசல் மனிதநேயம் பற்றி உணரும் தருணம் எல்லாம் படிப்படியாக காவியமாக விரிகிறது.

ஃபைசலாக (Faizal) மம்முட்டியின் மகன் துல்கர் சுல்தான். இவர் பிறக்கும் குட்டி கதையே ரகளை. இவர் தந்தை தனக்கு, பையன் தான் வேண்டும் என்று ஒவ்வொரு முறையும் ஆசைப்பட்டு அடுத்தடுத்தாக 4 பெண்களாக பிறக்கிறார்கள். ஐந்தாவதாக இவர் பிறக்கும் முன் வெறுத்து துபாய்ல வேலைக்குபோய் நல்ல பணக்காரனாக முன்னேறுகிறார்.

துல்கர் படத்திற்கு என்ன தேவையோ அதை பர்ஃபெக்டா கொடுத்து நடித்து விளையாண்டிருக்கார். குறிப்பா இவர் வாய்ஸ்ல ஒரு அட்ராக்‌ஷன் செம்மயா இருக்கு. செம வசீகரிக்கும் குரல். இனிமேல் மம்முட்டியோட மகன் துலகர் என்று சொல்லக்கூட தேவையில்லை போல.

திலகன் என்னா நடிகன்யா..!!! நமக்கு தெரிந்ததெல்லாம் ‘வர்னும் பழைய பன்னீர்செல்வமா வர்னும்’ என்று சத்திரியன் படத்தில் சொன்ன திலகனைத்தான். படத்தின் நிஜ ஹீரோவே இந்த மனுஷன் தான். உண்மையில் இவர் ஒரு மகாநடிகன், ’ஜஸ்ட் லைக் டட்’ நம்ம சிவாஜிய கிராஸ் பண்ணிடுவார் மனுஷன் - மிகைப்படுத்திய நடிப்பு துளியும் இல்லாமல். இவர் நடித்த கடைசி படமும் கூட.

ஹீரோயினாக நித்யா மேனன் (வெப்பம் பட ஹீரோயின்) அருமையான நடிப்பு. ஒரு இளமை துள்ளல் படம் பூரா பரவிகிடக்கு. குறிப்பா தான் வெளியில் சுதந்திரம் அனுபவிக்கும் காட்சி, நடுரோட்டில் டிரைவரிடம் இருந்து தப்பித்து ஓடும் காட்சி, அந்த சமயத்தில இவள் சிரிப்பு கொள்ளை அழகு. பார்த்துட்டே இருக்கலாம்....



இன்னொன்று படத்தின் இசை...... அட்டகாசம், ஆனந்தம்...ஆசம் (Awesome)!!! சூஃபி இசை படம் பூரா படர்ந்து கிடைக்கிறது. அவ்வளவு இனிமை அதை கேட்க. சூஃபியையும், வெஸ்டர்ன் இசையும் சேர்த்து சில இடத்தில் கொடுத்துள்ளார்கள்.... வர்ணிக்க வார்த்தையில்லை.

இன்னொரு குட்டி கதை சொல்ல மிஸ் பண்ணிட்டேன்.... இந்த மேலே போஸ்டரில் இருக்கும் காட்சி....அதாவது திலகன், சுலைமானி டீயை எப்படி செய்தார் என்று துல்கர் கேட்கும் இடமும், அதை தொடர்ந்து திலகர் சொல்லும் தன் கதையும் அருமையோ அருமை...... இந்த காட்சியை பார்த்தால் தான் அதன் பரவசம் புரியும். கீழே கொடுத்துள்ள பாடலை காணுங்கள்.

https://www.youtube.com/watch?v=wp-_XtXAPF4

கண்டிப்பா பாருங்க... மிஸ் பண்ணவே கூடாது....!!!

இந்த படம் முடியும் போது, நீங்களும் இனிமேல் நாம் சாப்பிடும் உணவை வீணாக்கக்கூடாது என்ற எண்ணம் நிச்சயம் தோன்றும். அதுவே இந்த படத்தின் வெற்றி.